» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போலீசார் வாகனத்தை பறித்ததால் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சனி 14, ஜூன் 2025 8:27:24 PM (IST)
கன்னியாகுமரியில் போலீசார் வாகனத்தை பறித்ததால் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இடலாகுடியை சேர்ந்த விஷ்ணுநிதி (29) என்ற வாலிபரின் இருசக்கர வாகனத்தை கன்னியாகுமரி போலீசார் பறித்துச் சென்று திருப்பி கொடுக்க மறுத்ததால், கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் நடுரோட்டில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ குளித்து தற்கொலை முயன்றார்.
இதையடுத்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த விஷ்னுநிதி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த வாலிபரின் உறவினர்கள் நீதி கேட்டு போராட இருப்பதாக தகவல் வெளியானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை: வானதி சீனிவாசன் பேட்டி!!
புதன் 25, ஜூன் 2025 5:22:49 PM (IST)

என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: ராமதாஸ் அறிவிப்பு
புதன் 25, ஜூன் 2025 5:02:23 PM (IST)

சுங்கச் சாவடிகளில் வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா? உயர்நீதிமன்றம் கேள்வி
புதன் 25, ஜூன் 2025 4:09:37 PM (IST)

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்!!
புதன் 25, ஜூன் 2025 12:47:01 PM (IST)

ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
புதன் 25, ஜூன் 2025 12:01:34 PM (IST)

ஜூன் 28ல் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு தேர்வு!
புதன் 25, ஜூன் 2025 11:49:20 AM (IST)
