» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2½ பவுன் செயின் பறிப்பு : மர்ம நபர் கைவரிசை!
திங்கள் 23, ஜூன் 2025 11:25:36 AM (IST)
இரணியல் அருகே ஓடும் பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் 2½ பவுன் தங்கச் செயினை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம் இரணியல் அருகே நெய்யூர் மாங்குழி பகுதியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவருடைய மனைவி மேரி ஏஞ்சல் (70). இவர் சம்பவத்தன்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு மருந்து வாங்க சென்றார். பின்னர் நாகர்கோவிலில் இருந்து திருநைனார்குறிச்சி வழியாக திங்கள்சந்தைக்கு செல்லும் பஸ்சில் ஏறி ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அந்த பஸ் மூங்கில்விளை பகுதியில் சென்றபோது, மேரி ஏஞ்சல் தனது கழுத்தில் கிடந்த 2½ பவுன் செயின் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பஸ்சை நிறுத்தும்படி கண்டக்டரிடம் கூறினார். இதையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அதைதொடர்ந்து பஸ் முழுவதும் மேரி ஏஞ்சல் தேடிப்பார்த்தார். ஆனாலும், நகை கிடைக்கவில்லை.
பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம ஆசாமி மேரி ஏஞ்சலிடம் நகை அபேஸ் செய்துவட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மேரி ஏஞ்சல் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவலர்களிடையே பாரபட்சம் காட்டும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்!
திங்கள் 23, ஜூன் 2025 5:43:04 PM (IST)

கொசு மருந்து தெளிப்போம்; மலேரியாவை ஒழிப்போம் : சுகாதாரத்துறை வேண்டுகோள்
திங்கள் 23, ஜூன் 2025 5:15:09 PM (IST)

தமிழகத்தில் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்: 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!
திங்கள் 23, ஜூன் 2025 4:40:58 PM (IST)

மாம்பழ விவசாயிகளை காத்திட தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை : சீமான் வலியுறுத்தல்..!!
திங்கள் 23, ஜூன் 2025 12:27:04 PM (IST)

ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்
திங்கள் 23, ஜூன் 2025 12:09:22 PM (IST)

முருகன் வடிவத்தில் நமது அறம் வளர்கிறது: முருக பக்தர்கள் மாநாட்டில் பவன் கல்யாண் பேச்சு
திங்கள் 23, ஜூன் 2025 8:45:58 AM (IST)
