» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆணவப் படுகொலை : கவின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஞாயிறு 3, ஆகஸ்ட் 2025 2:56:05 PM (IST)

ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் தந்தைக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (27). ஐ.டி. ஊழியர். கவின் கடந்த 27-ந்தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் வைத்து அதே பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன்-கிருஷ்ணகுமாரியின் மகன் சுர்ஜித் (24) என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு அவர்களும் விசாரணையை தொடங்கினர்.
இந்நிலையில் கவினின் தந்தை சந்திரசேகரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் கவின் தந்தை சந்திரசேகருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் கவின் தந்தை சந்திர சேகருடன் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிளாம்பாக்கத்தில் ரூ.18 கோடியில் காவல் நிலையம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 5:51:52 PM (IST)

தமிழ்நாட்டில் கிங்டம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 5:10:01 PM (IST)

தமிழ்நாட்டில் கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு அதிகரிப்பு : திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரி வழக்கு!
செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 4:57:23 PM (IST)

கவின் கொலை வழக்கில் 8 வாரத்தில் விசாரணை அறிக்கை: சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 4:03:22 PM (IST)

குமரி லெமூர் கடற்கரையில் கடல் சீற்றம்: 2-வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 12:08:38 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு மதுரையில் ஆக.21-ம் தேதி நடைபெறுகிறது!
செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 11:59:46 AM (IST)
