» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கால்வாய்களில் முள்செடிகளை அகற்ற நடவடிக்கை : கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா தகவல்

செவ்வாய் 28, அக்டோபர் 2025 3:13:40 PM (IST)



தாமிரபரணியில் முள்செடிகளை அகற்றுவது போலவே கால்வாய்களில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023 டிசம்பர் மாதத்தில் வெள்ளப்பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக அகரம், ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் சுற்றுப்பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். ஆற்று கரைகள் உடைந்து விட்டது. இதை சீரமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.

இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் முள்செடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணி கடந்த 2024 ஆம் ஆண்டு ஜுலை 6 ந்தேதி கலியாவூர் மருதூர் அணையில் துவங்கியது. இந்த பணியை கனிமொழி எம்.பி துவக்கி வைத்தார். அப்போதையமாவட்ட ஆட்சித்தலைவர் லெட்சுமிபதி முன்னிலை வகித்தார். எக்ஸ்னோரா நி-றுவனத்தின் வாடகை இல்லா இயந்திரம் மூலம், தனியார் மற்றும் அரசு உதவியுடன் நதியை சுத்தப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்தது. 

மருதூர் அணை, செந்நெல்பட்டி, ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி ஆகிய பகுதிகளில் இந்த பணி நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் ஆலோசனை படி நிதி பெறப்பட்டு மீண்டும் இந்த பணி துவங்கியது. கடந்த (2.02.2025) ஸ்ரீவைகுண்டம் கணியான் காலனியில் இருந்து ஆற்றுக்கரைக்குள் உள்ள முள்செடிகளை அகற்றும் பணி ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் மேலஆழ்வார் தோப்பு கிராம உதயம் மேற்பார்வையில் துவங்கியது.

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆழ்வார்திருநகரி வரை முன்மாதிரி தாமிரபரணியை உருவாக்க மாவட்ட ஆட்சியரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் கடட்மாக மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் மூலமாக தாமிரபரணியின் கரையோரங்களில் ஒருலட்சம் பனை விதைகள் நடும் பணி மற்றும் ஆழ்வார்திருநகரி பேரூராட்சி சார்பில் 1000 மரக்கன்று நடும் பணி கடந்த மாதம் 6.09.2025 அன்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் ஆற்றின் கரையோரங்களில் பனைவிதைகள் நடுதல், ஒரு லட்சம் விதைப்பந்துகள் வீசுதல், ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல் ஆகிய முப்பெரும் விழா ஸ்ரீவைகுண்டத்தில் 9.10.2025 அன்று தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமை வகித்து ஆற்றின் கரையோரங்களில் பனைவிதைகள் & மரக்கன்றுகள் நட்டு வைத்து, ஒரு லட்சம் விதைப்பந்துகள் வீசும் திருவிழாவினை தொடங்கி வைத்தார். மூன்றாம் கட்ட பணிகள் தொடக்க விழா ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதியில் கோட்டாட்சியர் பிரபு தொடங்கி வைத்தார்.

நான்காம் கட்ட பணி பொன்னன்குறிச்சி தாமிரபரணி நதிக்கரையில் நடந்தது. கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குனர் ஐஸ்வர்யா கலந்து கொண்டு மரக்கன்று நட்டு, பதை விதைகள் மற்றும் விதைப்பந்துகளை விதைத்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, ஆற்றின் கரைகளை பலப்படுத்திடும் நோக் கத்திலும், கரைகள் மண் அரிப்பினால் சேதமாகிடுவதை தடுத் திடும் வகையிலும் கரையோரங்களில் பனை மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. 

இதற்கு, மாண வர்கள், பொதுமக்கள் உறுதுணையாக இருக் கவேண்டும். இதில் பள்ளி மாணவ மாணவிகள் முன் நின்றுநடத்துவதால் அவர்களுக்கு மரம் மீதும் நதி மீதும் ஒரு பிடிப்பு ஏற்படும். தூத்துக்குடி மாவட்டத்தினை பொறுத்தவரை உள்ளாட்சி த்துறை சார்பில் நிறைய மரக்கன்றுகளை நடைபெற்ற வருகிறது. 

இதற்காக ஒன்றிய அலுவலர்களிடம் வலியுறுத்தி வருகிறோம். மரம் நடும் பணிக்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து ஆதரவு தரும். தாமிரபரணியை சுத்தப்படுத்தி விட்டு மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் வடகால்,தென்கால் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி வடிகாலை சுத்தம் செய்திட நடவடிக்கை எடுப்போம். என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற ஐ.ஜி. மாசானமுத்து, உள்ளூர் பிரமுகர் அருள் கிராம உதயம் நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்று பேசினார்.

ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னத்துரை, பொதுப்பணித்துறை கூடுதல் பொறியார்ள அமீர்கான், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்டோபர் தாசன், துணை தாசில்தார் லோக நாதன், பொன்னன்குறிச்சி பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியை சரஸ்வதி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சங்கர் கணேஷ், முன்னாள் கவுன்சிலர் பொன்ராஜ், துணைத்தலைவர் கணபதி, மணிகண்டன், எக்ஸ்னரோ கபடி முருகன், தாமிரபரணிபாதுகாப்பு இயக்கம் சுவாமிநாதன், முருகன், வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன், சமூக சேகவர் சித்திரை வேல், ஸ்ரீவைகுண்டம் முன்னாள் பேரூராட்சி சேர்மன் கந்தசிவசுப்பு, நதிக்கரை சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சந்துரு, தங்கராஜ், கோபால், செல்வன்துரை, விஜ யகுமார், ஆனந்த செல்வன், ஜெயராம், சுடலைமணி, மகளிர் குழுவினர்கள், பணி யாளர்கள், சமூகஆர் வலர்கள், உள்பட ஊர்பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம், பொன்னன்குறிச்சி ஊர்மக்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory