» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நாகர்கோவிலில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
புதன் 29, அக்டோபர் 2025 4:56:43 PM (IST)
நாகர்கோவிலில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
குமரி மாவட்டம், நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு சார்பு ஆய்வாளர் திலீபன் தலைமையிலான போலீசார் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேல கிருஷ்ணன் புதூர் ஜங்சன் அருகே புத்தளம் பகுதியை சேர்ந்த அசோகன் என்பவரது மகன் தனபாலன் (22) என்பவரை பிடித்து சோதனை செய்தனர்.
சோதனையில் தனபாலன் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். மேலும், போதை பொருட்கள் எதிரான நடவடிக்கை தீவிரபடுத்தப்படும் என்று காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உயர்கல்வி சேர்க்கை விகிதம் 96.15% ஆக உயர்வு : கனிமொழி எம்பி வாழ்த்து!
புதன் 29, அக்டோபர் 2025 4:20:54 PM (IST)

திமுக ஆட்சியில் ரூ.888 கோடி லஞ்சம் பெற்று பணி நியமனம்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
புதன் 29, அக்டோபர் 2025 4:09:37 PM (IST)

தவெக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: இபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு!
புதன் 29, அக்டோபர் 2025 4:00:39 PM (IST)

தூத்துக்குடியில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
புதன் 29, அக்டோபர் 2025 3:49:23 PM (IST)

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் கள்ளச் சந்தையில் பாஸ் விற்பனை? காவல்துறை விளக்கம்
புதன் 29, அக்டோபர் 2025 3:09:21 PM (IST)

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் யாரை காப்பாற்ற தி.மு.க. அரசு துடிக்கிறது?- அன்புமணி காட்டம்
புதன் 29, அக்டோபர் 2025 12:29:26 PM (IST)




