» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கலவை எந்திரம் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 12:04:17 PM (IST)
தூத்துக்குடியில் சாலையோரம் நிறுத்தியிருந்த கலவை எந்திரம் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் மாரி தங்கம் (28), சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். நேற்று ஏரலில் வேலை செய்துவிட்டு பைக்கில் முத்தையாபுரத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு முள்ளக்காடு அருகே வரும்போது சாலையோரம் நிறுத்தியிருந்த கலவை எந்திரம் மீது பைக் மோதியது.
இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த மாரித்தங்கம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முக குமாரி வழக்கு பதிவு செய்து கலவை எந்திரத்தை அனுமதி இல்லாமல் சாலை ஓரத்தில் நிறுத்தியதாக தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த தாமோதரன் மகன் சரவண பெருமாள் (41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீதிபதி தீர்ப்பிற்கு எதிராக கோஷம் எழுப்பிய தி.மு.க எம்.எல்.ஏ மகன்: விமான நிலையத்தில் பரபரப்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 11:25:39 AM (IST)

குமரி மாவட்டத்தில் 40 புதிய மகளிர் விடியல் பேருந்துகள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
திங்கள் 8, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

குமரி பேராயர் கிறிஸ்டோபர் விஜயன் பதவியேற்பு விழா : பிரதம பேராயர் ரூபன் மார்க் பங்கேற்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 10:37:57 AM (IST)

நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனத்தில் ரூ. 888 கோடி ஊழல் : அன்புமணி குற்றச்சாட்டு!
திங்கள் 8, டிசம்பர் 2025 10:25:22 AM (IST)

சென்னையில் இன்று ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து: பயணிகள் பாதிப்பு!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:14:58 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)


