» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சான்றிதழ் வாங்கி வந்த இளைஞர்கள் பஸ் மோதி உயிரிழப்பு - குமரியில் சோகம்!
புதன் 7, ஜனவரி 2026 11:12:54 AM (IST)
குமரியில், படிப்பை முடித்துவிட்டு சான்றிதழ் வாங்கி வந்த இளைஞர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டத்தை சேர்ந்த அஜேஸ் மற்றும் அர்ஷத்அலி ஆகிய இருவரும் ஓட்டல் மானேஜ்மெண்ட் படிப்பை முடித்த நிலையில், இன்று அவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று சான்றிதழை வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் வெள்ளமோடி பகுதி அருகே வந்தபோது, இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக பள்ளி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களுக்கு பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் போலி ஐபோன் உதிரிபாகங்கள் விற்பனை : போலீசார் அதிரடி சோதனை!
வியாழன் 8, ஜனவரி 2026 3:43:14 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டம் துவக்கம்
வியாழன் 8, ஜனவரி 2026 12:54:42 PM (IST)

அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்-க்கு இடமில்லை: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!
வியாழன் 8, ஜனவரி 2026 12:31:19 PM (IST)

நூறு ஆண்டுகள் பழமையான கோவில் இடிப்பு: இந்து முன்னணி குற்றச்சாட்டு!
வியாழன் 8, ஜனவரி 2026 12:14:32 PM (IST)

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் வழங்கும் திட்டம் : மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வியாழன் 8, ஜனவரி 2026 11:46:31 AM (IST)

