» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மாவட்ட சோதனைச் சாவடிகளில் 24 மணி நேர தீவிர கண்காணிப்பு: எஸ்பி திடீர் ஆய்வு

வியாழன் 19, பிப்ரவரி 2026 10:22:40 AM (IST)



2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த எஸ்பி உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாவட்டத்தின் பிற மாவட்ட எல்லைகளில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது.

சோதனையின் போது வாகனங்களின் விவரங்கள் முறையாகப் பதிவேட்டில் குறிக்கப்படுகின்றன. சோதனைச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் மாவட்டத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து வாகனங்களும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று செய்துங்கநல்லூர் சோதனைச் சாவடியில் நடைபெற்று வரும் கண்காணிப்புப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்களுக்குத் தகுந்த அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின் போது, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஷ், செய்துங்கநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜுன்குமார் மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory