» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக - தேமுதிக கூட்டணியை விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது: தமிழக பாஜக கடும் விமர்சனம்
வியாழன் 19, பிப்ரவரி 2026 3:53:00 PM (IST)

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ள நிலையில், "விஜயகாந்தின் ஆன்மா இந்தத் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்காது" என தமிழக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாகத் தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: "தன் வாழ்நாள் முழுவதும் 'தீய சக்தி' என திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த். அவர் உயிரோடு இருந்தவரை விஜயகாந்துக்கும், அவர் உருவாக்கிய தேமுதிகவுக்கும் திமுக பல்வேறு கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே பரிசாக வழங்கியது. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன், இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் கைகோர்த்திருப்பதை அவரது ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது!" இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எல்.கே. சுதீஷ் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்திற்குச் சென்றனர். அங்கு முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாகப் பேசினர்.
இந்தச் சந்திப்பின்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, பி.கே. சேகர்பாபு, கனிமொழி எம்.பி. மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.
"தாமதமான கூட்டணி" - பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
முதல்வருடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்ததாவது: கூட்டணி உறுதி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொண்டர்களின் விருப்பப்படியே எடுக்கப்பட்ட முடிவு.
வரலாற்றுப் பின்னணி: "2016-ஆம் ஆண்டிலேயே இந்தக் கூட்டணி அமைந்திருக்க வேண்டும். அப்போது கலைஞர் கருணாநிதி அவர்கள் 'பழம் நழுவிப் பாலில் விழும்' எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், கேப்டன் இல்லாத இந்தச் சமயத்தில் அது தாமதமாக நடந்துள்ளது."
தொகுதிப் பங்கீடு: தேமுதிக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார். இதற்காகத் தனிக் குழு அமைக்கப்பட்டு, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு முறைப்படியான அறிவிப்பு வெளியாகும்.
ராஜ்யசபா சீட்: ராஜ்யசபா உறுப்பினர் பதவி குறித்தும் உரிய நேரத்தில் முதல்வர் அறிவிப்பார் எனத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை : ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 3:18:36 PM (IST)

தமிழகத்திற்கு மார்ச் மாதம் 3 முறை பிரதமர் மோடி வருகை: மதுரை, வேலூர், திருச்சியில் பிரசாரம்
வியாழன் 19, பிப்ரவரி 2026 12:38:40 PM (IST)

தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேற இணைந்து பயணிப்போம்: மு.க.ஸ்டாலின் வரவேற்பு
வியாழன் 19, பிப்ரவரி 2026 12:00:03 PM (IST)

முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு: திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக!
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:57:51 AM (IST)

