» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

குளச்சல் ஆழ்கடல் பகுதியில் வீசி வரும் பலத்த சூறைக்காற்று காரணமாக, மீன்பிடித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கேரை மீன் சீசன் காலத்திலும் போதிய வருமானம் கிடைக்காததால் மீனவர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 1000-க்கும் அதிகமான வள்ளங்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பை நம்பியுள்ளன. வழக்கமாக 10 நாட்கள் தங்கி மீன்பிடிக்கும் விசைப்படகுகள், பலத்த காற்று காரணமாகப் பாதியிலேயே கரை திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது கேரை மீன்களுக்கான சீசன் என்றாலும், நேற்று கரை திரும்பிய சில படகுகளில் மிகக் குறைந்த அளவே மீன்கள் கிடைத்தன. கிடைத்த சொற்ப மீன்களை விற்றால், படகிற்குச் செலவு செய்த டீசல் காசு கூடக் கிடைக்கவில்லை" என மீனவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலையால் குளச்சல் துறைமுகப் பகுதியில் மீன்பிடி வர்த்தகம் தற்போது மந்தமான நிலையை எட்டியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

திமுக - தேமுதிக கூட்டணியை விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காது: தமிழக பாஜக கடும் விமர்சனம்
வியாழன் 19, பிப்ரவரி 2026 3:53:00 PM (IST)

மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை : ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 3:18:36 PM (IST)

தமிழகத்திற்கு மார்ச் மாதம் 3 முறை பிரதமர் மோடி வருகை: மதுரை, வேலூர், திருச்சியில் பிரசாரம்
வியாழன் 19, பிப்ரவரி 2026 12:38:40 PM (IST)

தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேற இணைந்து பயணிப்போம்: மு.க.ஸ்டாலின் வரவேற்பு
வியாழன் 19, பிப்ரவரி 2026 12:00:03 PM (IST)

முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு: திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக!
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:57:51 AM (IST)


முன்னாள் மீனவன்Feb 19, 2026 - 07:12:35 PM | Posted IP 162.1*****