» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக அரசின் ஊழல் ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்பவில்லை - பிரதமர் மோடி

வியாழன் 16, ஏப்ரல் 2026 12:32:11 PM (IST)



"நாகர்கோவிலில் நடைபெற்ற சாலைப் பேரணி ஈடு இணையற்ற உற்சாகத்தால் நிரம்பி இருந்தது. திமுகவின் தவறான நிர்வாகத்தையும், ஊழலையும் தமிழ்நாடு மக்கள் விரும்பவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது," எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாகர்கோவிலில் பிரம்மாண்ட சாலைப் பேரணி நடத்தினார். திருவனந்தபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் வந்த அவர், வேப்பமூடு முதல் வடசேரி வரை சுமார் 1.5 கி.மீ. தூரம் திறந்தவெளி வாகனத்தில் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இந்தப் பேரணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், அண்ணாமலை மற்றும் கூட்டணி கட்சிகளான பாமக, அமமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். பேரணிக்குப் பிறகு தனது 'எக்ஸ்' (X) தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி: "நாகர்கோவில் சாலைப் பேரணி ஈடு இணையற்ற உற்சாகத்தால் நிரம்பி இருந்தது. மாநிலத்தில் மக்களை மையமாகக் கொண்ட சிறந்த ஆட்சியைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி வழங்கும். மாற்றத்தை விரும்பும் மக்கள் எழுச்சி இங்கே பிரதிபலிக்கிறது," எனக் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

BalaApr 16, 2026 - 01:29:23 PM | Posted IP 172.7*****

Unnayave yengalukku pudikkala

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory