» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது: தொகுதி மறுவரையறை குறித்து கிருஷ்ணசாமி கருத்து!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:52:09 PM (IST)
தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தனது கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் அவர், இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது "மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 815 ஆக உயர்த்துவது வரவேற்கத்தக்கது.தொகுதி மறுவரையறை செய்யும் போது மற்ற மாநிலங்களுக்கு இணையாகத் தமிழகத்திற்கும் சதவீத அடிப்படையில் உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். இல்லையெனில், தமிழகத்தின் முக்கியத்துவம் குறைந்து பாதிப்பு ஏற்படும். இந்த விவகாரத்தில் யார் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தபோது 90% வளர்ச்சிப் பணிகளைச் செய்தேன்; தற்போது தேய்ந்து போயுள்ள தொகுதியை மீண்டும் மீட்டெடுப்பேன். ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் பணத்தை நம்பியே தேர்தலைச் சந்திக்கின்றன. எனவே, தேர்தல் ஆணையம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். மது மற்றும் லஞ்சம் இல்லாத தமிழகமே எங்களது இலக்கு என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் என்னைச் சந்திக்கவே இல்லை: த.வெ.க-வை விட்டு விலகிய அஜிதா ஆக்னல் குற்றச்சாட்டு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:39:53 PM (IST)

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள்: திமுக மேடையில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:24:39 PM (IST)

வீணாகப் பயமுறுத்துகிறார் ஸ்டாலின்: தொகுதி மறுவரையறை குறித்து இபிஎஸ் விளக்கம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 4:01:11 PM (IST)

தூத்துக்குடியில் சட்டநகலை எரித்து திமுக - காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 3:25:29 PM (IST)

பேருந்து மோதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி உயிரிழப்பு: தூத்துக்குடியில் சோகம்
வியாழன் 16, ஏப்ரல் 2026 3:21:37 PM (IST)

எங்கள் ஓட்டு விற்பனைக்கு இல்லை; ஜனநாயகத்திகே! தூத்துக்குடியில் வைரலாகும் பதாகை!
வியாழன் 16, ஏப்ரல் 2026 3:10:35 PM (IST)

