» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எங்கள் ஓட்டு விற்பனைக்கு இல்லை; ஜனநாயகத்திகே! தூத்துக்குடியில் வைரலாகும் பதாகை!
வியாழன் 16, ஏப்ரல் 2026 3:10:35 PM (IST)

"வாக்கு என்பது விற்பனைக்கு அல்ல, அது ஜனநாயகத்தின் கடமை” என்பதை வலியுறுத்தி, தூத்துக்குடியில் கோவில் வரிதாரர்கள் ஒன்றிணைந்து வைத்துள்ள பதாகை பெரும் வரவேற்பை பெற்று விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாசிலாமணிபுரத்தில் 1953-ம் ஆண்டு நிறுவப்பட்ட மிகப்பழமையான அருள்மிகு ஸ்ரீ காசி விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலைச் சார்ந்த சுமார் 2,500 வரிதாரர்கள் ஒன்றிணைந்து, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு ஒருமித்த முடிவை எடுத்துள்ளனர்.
கோவில் வளாகத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ள அந்தப் பதாகையில்: "ஓட்டு என்னும் மூலப்பொருளைக் கேட்டு வரும் அன்பர்களே! தொழிலதிபர்களே! எங்கள் குலதெய்வம் ஸ்ரீ காசி விநாயகர் - ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் வரிதாரர்கள், உறுப்பினர்கள் மற்றும் பக்தர்களின் ஓட்டு விற்பனைக்கு இல்லை; இது ஜனநாயகத்திற்கே!" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
இது குறித்துக் கோவில் தர்மகர்த்தா சுப்பையா, கௌரவ தர்மகர்த்தா செம்புலிங்கம், பொருளாளர் சுடலைமணி மற்றும் கௌரவ ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்களது கோவிலைச் சேர்ந்த 2,500 வரிதாரர்களும் தங்களது விருப்பப்படி ஜனநாயக முறைப்படி மட்டுமே வாக்களிப்பார்கள். எக்காரணம் கொண்டும் வாக்குகளை விற்பனை செய்ய மாட்டோம்.
வாக்கு என்பது ஒரு நாட்டின் மிக முக்கிய மூலப்பொருள். இதைப் பயன்படுத்திதான் கவுன்சிலர் முதல் பிரதமர் வரை அனைவரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அரசியலில் நேர்மையானவர்களுக்கும், ஜனநாயகத்திற்கும் வலுசேர்க்கும் வகையில் வாக்களிக்க முடிவு செய்துள்ளோம். பொதுமக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இக்கோவில் முன்பு அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பதாகையை வைத்துள்ளோம்.
வாக்கிற்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரத்திற்கு எதிராக, ஒரு ஆன்மீக அமைப்பைச் சேர்ந்தவர்கள் திரண்டு எடுத்துள்ள இந்த முடிவு சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் என்னைச் சந்திக்கவே இல்லை: த.வெ.க-வை விட்டு விலகிய அஜிதா ஆக்னல் குற்றச்சாட்டு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:39:53 PM (IST)

தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது: தொகுதி மறுவரையறை குறித்து கிருஷ்ணசாமி கருத்து!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:52:09 PM (IST)

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள்: திமுக மேடையில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 5:24:39 PM (IST)

வீணாகப் பயமுறுத்துகிறார் ஸ்டாலின்: தொகுதி மறுவரையறை குறித்து இபிஎஸ் விளக்கம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 4:01:11 PM (IST)

தூத்துக்குடியில் சட்டநகலை எரித்து திமுக - காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
வியாழன் 16, ஏப்ரல் 2026 3:25:29 PM (IST)

பேருந்து மோதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி உயிரிழப்பு: தூத்துக்குடியில் சோகம்
வியாழன் 16, ஏப்ரல் 2026 3:21:37 PM (IST)

