» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மாரத்தான் : மக்களோடு மக்களாக ஓடிய முதல்வர் விஜய்!

வெள்ளி 26, ஜூன் 2026 10:21:55 AM (IST)



சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளையொட்டி சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்ததுடன், பொதுமக்களுடன் இணைந்து தானும் அந்த ஓட்டத்தில் பங்கேற்றார்.

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இன்று (ஜூன் 26) விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் அருகே இந்தச் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்டத்தினை முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர்கள், அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

விழிப்புணர்வு மாரத்தானைத் தொடங்கி வைத்ததுடன் நின்றுவிடாமல், பொதுமக்களோடு மக்களாக இணைந்து முதலமைச்சர் விஜய்யும் இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்று ஓடினார். அவருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த், மரிய வில்சன், வெங்கட்ரமணன் ஆகியோரும், டிஜிபி, காவல் ஆணையர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகளும் இந்த ஓட்டத்தில் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory