» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை கேன்சர் மருத்துவமனை கட்டிடப் பணிக்கு டிஎம்பி அறக்கட்டளை ரூ.1 கோடி நிதி உதவி!

வெள்ளி 24, ஜூலை 2026 3:42:10 PM (IST)

TMBTrust1cror.jpg

நெல்லை செங்குளத்தில் கட்டப்பட்டு வரும் நெல்லை கேன்சர் மருத்துவமனை நிர்மாணப் பணிகளுக்காக, டிஎம்பி அறக்கட்டளை சார்பில் 3-வது தவணையாக ரூ.1 கோடிக்கான காசோலை இன்று வழங்கப்பட்டது.

‘உதவும் உள்ளங்கள்’ அறக்கட்டளை சார்பில் திருநெல்வேலி மாவட்டம் செங்குளம் பகுதியில் "நெல்லை கேன்சர் மருத்துவமனை" புதிதாகக் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டுமானப் பணிகளுக்காக டிஎம்பி அறக்கட்டளை சார்பாக மொத்தம் ரூ.3.34 கோடி நிதி உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக, கடந்த நிதியாண்டில் ரூ.2 கோடி நிதி உதவி வழங்கப்பட்டிருந்தது.:

அதன் தொடர்ச்சியாக, இன்று தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், டிஎம்பி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்  சாலி எஸ். நாயர் 3-வது தவணையாக ரூ.1 கோடிக்கான காசோலையை ‘உதவும் உள்ளங்கள்’ அறக்கட்டளையின் அறங்காவலர் சங்கரமகாதேவனிடம் வழங்கினார். இந்த நிகழ்வின் போது அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி முத்தையா உடனிருந்தார்.

இது குறித்து டிஎம்பி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில்: "திருநெல்வேலியில் அமையவிருக்கும் இந்த நவீனப் புற்றுநோய் மருத்துவமனை மூலம், புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், இதர சிகிச்சைகளின் வெற்றி விகிதமும் உயர்ந்து, தென் தமிழகப் பகுதி மக்களின் ஆரோக்கியமும் வாழ்க்கைத் தரமும் கணிசமாக மேம்படப் பெரும் வாய்ப்பாக இது அமையும்" எனத் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory