» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுகவில் கிளை முதல் மாவட்டம் வரை அதிரடி மாற்றங்கள்: செயற்குழுவில் 9 தீர்மானங்கள்!

சனி 22, ஆகஸ்ட் 2026 12:17:14 PM (IST)

திமுகவில் மாவட்டக் கழகங்கள் 110-ஆக அதிகரிப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளராக ஒருவர் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தில், திமுகவின் 16-ஆவது கழக அமைப்புத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பை மறுசீரமைக்கும் 9 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாக மறுசீரமைப்புக்கான 9 முக்கியத் தீர்மானங்கள்:

கிளைக் கழகச் செயலாளர்:

வயது வரம்பு: அதிகபட்சமாக 45 வயது என நிர்ணயிக்கப்படுகிறது.

பதவிக் காலம்: ஒருவர் அதிகபட்சமாக 2 முறை மட்டுமே அப்பொறுப்பில் நீடிக்க முடியும்.

மாநகரக் கிளைகள் உருவாக்கம்:

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் வட்டக் கழகங்களுக்குக் கீழ் 'கிளைக் கழகம்' என்ற புதிய பிரிவு உருவாக்கப்படுகிறது.

இதன் செயலாளருக்கும் அதிகபட்ச வயது வரம்பு 45 மற்றும் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும்.

வட்டக் கழகங்கள் சீரமைப்பு:

சென்னை மாநகராட்சியில் சராசரியாக 10,000 வாக்காளர்களுக்கும், பிற மாநகரங்களில் 5,000 வாக்காளர்களுக்கும் ஒரு வட்டக் கழகம் அமைக்கப்படும்.

வட்டச் செயலாளரின் அதிகபட்ச வயது வரம்பு 50 ஆகும் (அதிகபட்சம் 2 முறை).

பேரூர்க் கழகச் செயலாளர்:

பேரூர்க் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது வரம்பு 60 ஆக நிர்ணயிக்கப்படுகிறது (அதிகபட்சம் 2 முறை).

பகுதிக் கழகங்கள் சீரமைப்பு:

சென்னையில் 40,000 வாக்காளர்களுக்கும், பிற மாநகரங்களில் 30,000 வாக்காளர்களுக்கும் ஒரு பகுதிக் கழகம் உருவாக்கப்படும்.

பகுதிச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 ஆகும் (அதிகபட்சம் 2 முறை).

நகரக் கழகங்கள் சீரமைப்பு:

சராசரியாக 40,000 வாக்காளர்களை உள்ளடக்கி ஒரு நகரக் கழகம் அமைக்கப்படும்.

நகரச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 (அதிகபட்சம் 2 முறை).

ஒன்றியக் கழகங்கள் சீரமைப்பு:

சராசரியாக 30,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் உருவாக்கப்படும்.

எந்தவொரு ஊராட்சியும் இரண்டாகப் பிரிக்கப்படக் கூடாது; ஒரு ஒன்றியம் ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் மட்டுமே அமைய வேண்டும்.

ஒன்றியச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 (அதிகபட்சம் 2 முறை).

மாவட்டக் கழகங்கள் 110-ஆக அதிகரிப்பு:

வருவாய் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற அடிப்படையில் மறுசீரமைக்கப்படும்.

இதன்படி தற்போதிருக்கும் 77 கழக மாவட்டங்கள் 110-ஆக அதிகரிக்கப்படும். இதனால் 'மாநகரச் செயலாளர்' பொறுப்பு இனி தேவையில்லை எனக் கருதப்படுக்கிறது.

மாவட்டச் செயலாளரின் அதிகபட்ச வயது வரம்பு 70 என நிர்ணயிக்கப்படுவதுடன், ஒருவர் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும்.

அமைப்புகளை உருவாக்கும் காலவரையறை:

புதிய 110 கழக மாவட்டங்களை திமுக தலைவர் அறிவித்த பிறகு, 15 நாட்களுக்குள் அனைத்துக் கீழ்நிலை அமைப்புகளும் உருவாக்கப்பட்டுத் தலைமைக் கழகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory