» சினிமா » செய்திகள்

சர்ச்சையான நாயுடு பேச்சு: மன்னிப்பு கோரி விளக்கமளித்தார் நடிகர் பார்த்திபன்!

செவ்வாய் 17, மார்ச் 2026 4:10:24 PM (IST)

சமீபத்தில் தெலுங்குத் திரைப்பட விழாவொன்றில் நடிகர் பார்த்திபன் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து அவர் உருக்கமான விளக்கத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு உச்ச நடிகரான பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'உஸ்தாத் பகத் சிங்' திரைப்பட விழாவில் கலந்துகொண்ட பார்த்திபன், மேடையில் பேசும்போது:    "நான் ஒரு நாயுடு பையன்... சென்னையில் வளர்ந்ததால் எனக்கு தெலுங்கு தெரியாது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, "எப்போதும் சாதிக்கு எதிராகப் பேசும் பார்த்திபன், இப்போது ஏன் சாதியைக் குறிப்பிட வேண்டும்?" என நெட்டிசன்கள் பலரும் அவருக்கு எதிராகக் கருத்துக்களைப் பதிவிட்டனர்.

இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பார்த்திபன், அதில் கூறியிருப்பதாவது: "என் பேச்சு யாருடைய மனதையாவது காயப்படுத்தியிருந்தால், வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சில விஷயங்கள் தேவையின்றிப் பெரிய விவாதமாகி விடுகின்றன. நான் எவ்வளவு தமிழ் பற்று கொண்டிருந்தாலும், என் பிறப்புச் சான்றிதழை மாற்ற முடியாது. என் பிறப்பு என் பொறுப்பு அல்ல; எந்தக் குழந்தையும் இன்ன சாதியில் பிறக்க வேண்டும் என்று கேட்டுப் பிறப்பதில்லை."

எனக்கு சோறு, சுகம் என எல்லாவற்றையும் தந்தது தமிழ் தான். நான் எங்கு சென்றாலும் தமிழைப் பெருமையாகச் சொல்வேன். நான் தமிழுக்காகவே வாக்கப்பட்டவன். தெலுங்கு மேடையில் பேசும்போது எனக்குச் சற்று பதற்றமாக இருந்தது. திணறாமல் ஏதாவது பேச வேண்டும் என்ற வேகத்தில் அந்த வார்த்தை வந்துவிட்டது.

மேலும், அந்தத் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பில் தனக்குப் பதிலாக வேறொருவர் டப்பிங் பேசியுள்ளதாகவும், ஆனால் அதன் தமிழ்ப் பதிப்பிற்குத் தானே குரல் கொடுக்கப் போவதாகவும் அவர் அந்தப் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். "தமிழ் உயர்ந்த மொழி, அதில் அன்பும் கருணையும் இருக்கிறது; தயவுசெய்து இதனைப் பெரிய பிரச்சனையாக்க வேண்டாம்" என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory