» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மராட்டியத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் : மும்மொழி கொள்கை நிறுத்தி வைப்பு!
புதன் 28, மே 2025 5:06:53 PM (IST)
இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து மராட்டியத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மராட்டியத்தில் தேசிய கல்வி கொள்கை 2020ன் கீழ், மராட்டியம் மற்றும் ஆங்கில வழி கல்வி பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 3வது மொழிப் பாடமாக இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டது. இதற்கு உத்தவ் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
3வது மொழியாக இந்தி மொழி சேர்க்கப்பட்டு இருப்பது கல்வி ரீதியாக நியாயமற்றது என்றும் இது மாணவர்களின் உளவியல் நலனுக்கு ஏற்றது அல்ல என்றும் மராட்டிய மாநில மொழி ஆலோசனைக் குழு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து மராட்டியத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தி கட்டாயம் என்ற மும்மொழி கொள்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே உள்ள மராட்டி, ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையே பின்பற்றப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தாதா பூசே அறிவிப்பு வெளியிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறு நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை
வெள்ளி 30, மே 2025 12:07:50 PM (IST)

கர்நாடகாவில் தக் லைஃப் ரிலீஸ் ஆகாது: கர்நாடக திரைப்பட சம்மேளனம் எச்சரிக்கை
வெள்ளி 30, மே 2025 10:39:44 AM (IST)

சிறந்த நடிகர் அல்லு அர்ஜுன், துணை நடிகர் எஸ்.ஜே. சூர்யா: தெலங்கானா அரசின் விருதுகள் அறிவிப்பு
வெள்ளி 30, மே 2025 10:30:16 AM (IST)

கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிடுவதில் ஆர்வம் காட்டவில்லையா? : மத்திய அரசு விளக்கம்
வியாழன் 29, மே 2025 5:53:49 PM (IST)

பா.ஜ.க.வின் சூப்பர் செய்தித் தொடர்பாளராக சசிதரூர் மாறிவிட்டார்: காங். விமர்சனம்
வியாழன் 29, மே 2025 12:52:44 PM (IST)

ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளையும் திரும்பப் பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்!
வியாழன் 29, மே 2025 12:48:01 PM (IST)
