» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பா.ஜ.க.வின் சூப்பர் செய்தித் தொடர்பாளராக சசிதரூர் மாறிவிட்டார்: காங். விமர்சனம்

வியாழன் 29, மே 2025 12:52:44 PM (IST)

பா.ஜ.க.வின் சூப்பர் செய்தித்தொடர்பாளராக சசிதரூர் மாறிவிட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் விமர்சித்துள்ளார். 

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தவும், பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளை வெளிப்படுத்தவும், பயங்கரவாதத்திற்கு எதிராக நட்பு நாடுகளை ஒன்றிணைக்கவும் மத்திய அரசு அனைத்துக்கட்சி குழு அமைத்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் உள்பட பல்வேறு கட்சி எம்.பி.க்கள் குழுவினர் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைத்து வருகின்றனர்.

இதனிடையே, பனாமாவுக்கு சசிதரூர் தலைமையிலான குழு சென்றது. அந்த குழு பனாமா அதிகாரிகளை சந்தித்து ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் எடுத்துரைத்தது. அப்போது, அங்கு செய்தியாளர்களை சந்தித்த சசிதரூர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை பாராட்டினார்.

இந்நிலையில், மோடி மற்றும் பா.ஜ.க. அரசை பாராட்டிய சசிதரூரை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான உதித் ராஜ் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக உதித் ராஜ் கூறுகையில், பா.ஜ.க.வின் சூப்பர் செய்தித்தொடர்பாளராக சசிதரூர் மாறிவிட்டார். பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் பிரதமர் மோடி, பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக பேசுவதை விட சசிதரூர் அதிக ஆதரவாக பேசுகிறார்' என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory