» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்மண்டல அளவில் சிறந்த காவல் நிலையமாக தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் தேர்வு

வெள்ளி 26, ஜூலை 2024 3:08:37 PM (IST)


தென்மண்டல அளவில் சிறந்த காவல் நிலையமாக தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சேவையை மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாடு சேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கு தமிழக முதல்வரின் கேடயம் வழங்கப்படுகிறது. 

மேலும் தென் மண்டல அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கும் இந்த கேடயங்கள் வழங்கப்படுகிறது. இதில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இயங்கி வரும் காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் முன்னீர்பள்ளம் காவல் நிலையமும், தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் காவல் நிலையமும், தூத்துக்குடி மாவட்டத்தில் வடபாகம் காவல் நிலையம் சிறந்த சேவைக்குரியதாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த காவல் நிலையங்களுக்குரிய முதல்வர் கேடயங்களை டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கினார். சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் அதனை பெற்றுக் கொண்டனர்.


மக்கள் கருத்து

nishaJul 29, 2024 - 12:54:24 PM | Posted IP 172.7*****

poya loose

தமிழ்ச்செல்வன்Jul 26, 2024 - 05:31:04 PM | Posted IP 172.7*****

செல்லாது.... செல்லாது..... எத்தனை வருடங்கள் ஆனாலும் சிறந்த காவல் நிலையம் சாத்தான்குளம் மட்டுமே....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண் அடித்துக் கொலை: கணவர் வெறிச்செயல்!

வியாழன் 17, அக்டோபர் 2024 8:56:49 AM (IST)


Sponsored Ads



Tirunelveli Business Directory