» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது!
ஞாயிறு 8, செப்டம்பர் 2024 11:15:49 AM (IST)
ஸ்ரீவைகுண்டம் அருகே இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் வீடியோ பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி ராமகிருஷ்ணன், "சாதி மத பாகுபாட்டுடன் அதன் குறியீடுகளை பயன்படுத்துவோர் மீதும், சமூக நல்லிணக்கத்திற்கு விரோதமாக செயல்படும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். அதன்படி, ஸ்ரீவைகுண்டம் துணை கோட்ட அலுவலக எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் சமூக வலைதளங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் பத்மநாபமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் அருண்குமார் (27) என்பவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரிவாளை பயன்படுத்தி சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைக்கும் விதமான பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார். இதனை அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் அருண்குமாரை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண் தலை துண்டித்து கொடூர கொலை: நடத்தை சந்தேகத்தால் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 13, மார்ச் 2026 8:32:53 AM (IST)

நெல்லையில் 3 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை: போக்சோ குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை!
வியாழன் 12, மார்ச் 2026 8:30:53 PM (IST)

சிறுமியை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் : வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!
வியாழன் 12, மார்ச் 2026 3:28:28 PM (IST)

மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்
புதன் 11, மார்ச் 2026 4:56:24 PM (IST)

நெல்லையில் 11 இடங்களில் சோதனைச்சாவடி: எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர வாகன சோதனை!
புதன் 11, மார்ச் 2026 8:40:02 AM (IST)

துணை நடிகைக்கு காதல் தொல்லை கொடுத்த நெல்லை வாலிபர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது
செவ்வாய் 10, மார்ச் 2026 8:34:31 PM (IST)


MarishkumarSep 8, 2024 - 01:01:25 PM | Posted IP 172.7*****