» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது!
ஞாயிறு 8, செப்டம்பர் 2024 11:15:49 AM (IST)
ஸ்ரீவைகுண்டம் அருகே இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் வீடியோ பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி ராமகிருஷ்ணன், "சாதி மத பாகுபாட்டுடன் அதன் குறியீடுகளை பயன்படுத்துவோர் மீதும், சமூக நல்லிணக்கத்திற்கு விரோதமாக செயல்படும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். அதன்படி, ஸ்ரீவைகுண்டம் துணை கோட்ட அலுவலக எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் சமூக வலைதளங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் பத்மநாபமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் அருண்குமார் (27) என்பவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரிவாளை பயன்படுத்தி சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைக்கும் விதமான பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார். இதனை அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் அருண்குமாரை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் பணிகளுக்காக டிச.13, 14ல் சிறப்பு முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:42:37 PM (IST)

தென்காசி வக்கீல் கொலையில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!
வெள்ளி 12, டிசம்பர் 2025 8:20:02 AM (IST)

கைவினைக் கலைஞர்கள் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 11, டிசம்பர் 2025 10:35:09 AM (IST)

மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
வியாழன் 11, டிசம்பர் 2025 8:27:54 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்!
புதன் 10, டிசம்பர் 2025 4:45:40 PM (IST)

அரசு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை: கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை!
புதன் 10, டிசம்பர் 2025 8:42:41 AM (IST)



MarishkumarSep 8, 2024 - 01:01:25 PM | Posted IP 172.7*****