» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

சனி 21, செப்டம்பர் 2024 8:34:40 AM (IST)

தென்காசியில் கொலை முயற்சி வழக்கின் குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். 

தென்காசி பாறையடி மேட்டு தெருவை சேர்ந்தவர் திருமலை குமார்  மகன் முகமது மைதீன் @ நாகராஜன்(28).  இவர் மீது தென்காசி காவல் நிலையத் தில்  கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

இவர் தொடர்ந்து குற்றச் செயல் களில் ஈடுபட்டு வந்ததால்  இவர்   மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத் தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஶ்ரீனிவாசன் தென்காசி  மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்தார்.

இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்  குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் முகமது மைதீன் @ நாகராஜனை கைது செய்ய உத்தரவிட்டார். இதனை அடுத்து தென்காசி காவல்துறையினர் நேற்று   முகமது மைதீன் @ நாகராஜனை  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory