» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை சீரமைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:20:01 AM (IST)

தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை சீரமைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பொன் காந்திமதிநாதன், என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வரை 40 கிலோ மீட்டர் சாலையானது, தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையில் தூத்துக்குடி துறைமுகம், உப்பளங்கள் உள்பட பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 

தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் சென்ற பின்னர், இந்த சாலையில் எந்த பராமரிப்பும் செய்யப்படவில்லை. முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் கோவில் இந்த பகுதியிலேயே உள்ளது. நாள்தோறும் ஏராளமான வெளிநாடு மற்றும் வெளி மாநிலபக்தர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். பல இடங்களில் குண்டும், குழியுமாக மிகவும் சேதம் அடைந்து காணப்படுவதால், அதிக விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த சாலையை முறையாக சீரமைக்கக்கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வரையிலான 40 கி.மீட்டர் தூர இருவழிச்சாலையை சீரமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.


மக்கள் கருத்து

அந்தோணிசாமிFeb 20, 2025 - 03:20:50 PM | Posted IP 162.1*****

வழக்கு தொடுத்த அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள்

Muthusamy s.Feb 19, 2025 - 08:22:13 AM | Posted IP 162.1*****

Very very worst road Take action immediately

SubbiahFeb 19, 2025 - 07:34:25 AM | Posted IP 162.1*****

Welcome.most important for transport to all vehicles move to road.but the road not good so vehicles suffering slow moving.due to heavy traffic all' time government take action to immediately

SeenivasagamFeb 18, 2025 - 11:00:01 PM | Posted IP 162.1*****

வழக்கு தொடர்ந்தவர்க்கு பணம் கொடுத்து முடித்து விடுவார்கள்

சக்தி நவீன்Feb 18, 2025 - 09:45:54 PM | Posted IP 162.1*****

முக்காணி வட ஆத்தூர் தெற்கு ஆத்தூர் ஆத்தூர் ரோடு ரொம்ப மோசமா மோசமா இருக்கு

ராஜாராம்Feb 18, 2025 - 11:19:21 AM | Posted IP 172.7*****

கனி அக்கா தலைமையில் ஹேப்பி தெரு கொண்டாடுவோமா

ஆம்Feb 18, 2025 - 09:52:15 AM | Posted IP 172.7*****

இப்போ இருக்கும் அடிஅக்டி சொகுசு காரில் செல்லும் அரசியல்வாதிகளுக்கு அறிவு இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory