» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் ஸ்டாலினை அப்பா என்று சொல்லமாட்டார்கள்: கடம்பூர் செ.ராஜூ பேச்சு!
புதன் 19, பிப்ரவரி 2025 10:22:35 AM (IST)

"தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அப்பா என்று சொல்லப் போவதில்லை" என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ பேசுகையில் "அண்ணாவை பேரறிஞர் அண்ணா என்று, தந்தை பெரியாரை ஐயா என்று மக்கள் உணர்வுபூர்வமாக அழைத்தனர்.
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் தமிழகத்தை கட்டி போட்ட வரலாறு உண்டு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அம்மா என்று எல்லோரும் அன்புடன் அழைத்தனர். அது இயற்கையாகவே அமைந்தது. முதல்வர் மு.க ஸ்டாலின் அவருடைய தந்தையை வேண்டுமென்றால் அப்பா என்று சொல்லிக் கொள்ளலாம்.
ஆனால் தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் முக ஸ்டாலினை அப்பா என்று சொல்லப் போவதில்லை. திமுக எப்போதும் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதில்லை. அதிமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. அதிமுகவில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டது என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்ட சுகாதார துறையில் 48 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 13, மார்ச் 2025 8:20:44 PM (IST)

மாணவர்கள் உயர்கல்வி பயில ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
வியாழன் 13, மார்ச் 2025 3:59:08 PM (IST)

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் யாகசாலை அமைக்க கால்கோள் விழா: ஆட்சியர் பங்கேற்பு
புதன் 12, மார்ச் 2025 8:16:31 PM (IST)

கன்னிவெடிகளை கண்டறியும் எச்சரிக்கை கருவி கண்டுபிடிப்பு: நெல்லை மாணவனுக்கு டி.ஐ,ஜி. பாராட்டு
செவ்வாய் 11, மார்ச் 2025 5:15:37 PM (IST)

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதும் மாணவி : இட்டமொழியில் சோகம்
செவ்வாய் 11, மார்ச் 2025 12:20:54 PM (IST)

வாலிபரை தலை துண்டித்து கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 11, மார்ச் 2025 8:39:51 AM (IST)

tutyianFeb 19, 2025 - 11:14:57 AM | Posted IP 162.1*****