» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் ஸ்டாலினை அப்பா என்று சொல்லமாட்டார்கள்: கடம்பூர் செ.ராஜூ பேச்சு!

புதன் 19, பிப்ரவரி 2025 10:22:35 AM (IST)



"தமிழக மக்கள் ஒருபோதும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அப்பா என்று சொல்லப் போவதில்லை" என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ பேசுகையில் "அண்ணாவை பேரறிஞர் அண்ணா என்று, தந்தை பெரியாரை ஐயா என்று மக்கள் உணர்வுபூர்வமாக அழைத்தனர். 

எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் தமிழகத்தை கட்டி போட்ட வரலாறு உண்டு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அம்மா என்று எல்லோரும் அன்புடன் அழைத்தனர். அது இயற்கையாகவே அமைந்தது. முதல்வர் மு.க ஸ்டாலின் அவருடைய தந்தையை வேண்டுமென்றால் அப்பா என்று சொல்லிக் கொள்ளலாம். 

ஆனால் தமிழக மக்கள் ஒருபோதும்  முதல்வர் முக ஸ்டாலினை அப்பா என்று சொல்லப் போவதில்லை. திமுக எப்போதும் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை  நிறைவேற்றியதில்லை. அதிமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. அதிமுகவில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு  தங்கம் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டது என்றார்.


மக்கள் கருத்து

tutyianFeb 19, 2025 - 11:14:57 AM | Posted IP 162.1*****

ipdi lossu mathri pesitu irukurathunaala thaan makkal ungala summa ukkara vachirukanga.. innum thirunthalaya neenga

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory