» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி கல்லூரியில் மாணவர் நீக்கப்பட்ட விவகாரம் : 2வது நாளாக உண்ணாவிரத போராட்டம்!
புதன் 19, பிப்ரவரி 2025 12:38:01 PM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாணவர் நீக்கத்தைக் கண்டித்து இன்று 2வது நாளாக கல்லூரி முன்பு மாணவர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை கண்டித்து கடந்த 2024 ஜூலை மாதம் நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு மாணவர் சங்க நிர்வாகி நேசமணியை ஒழுங்கு நடவடிக்கை விசாரணை கமிஷன் என்ற பெயரில் கல்லூரி நிர்வாகம் நீக்கியுள்ளது. இதனைக் கண்டித்து மாணவர் சங்கத்தினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நேற்று துவங்கினர்.
இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் சைலேஷ் அருள்ராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுரேஷ், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ராம்குமார் மாடசாமி உள்ளிட்டு பல மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
தமிழக அரசும் உயர்நிலைத் துறையும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணம் தொடர்பாக உடனடியான ஒரு விசாரணை கமிட்டியை உருவாக்கி கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். மாணவர் நேசமணி நிரந்தர நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். கல்வி கட்டண கொள்ளை மூலம் லாபம் சம்பாதிக்கும் கல்லூரி நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மக்கள் கருத்து
PrakashFeb 19, 2025 - 12:47:11 PM | Posted IP 162.1*****
Fees problem
PrakashFeb 19, 2025 - 12:47:11 PM | Posted IP 172.7*****
Fees problem
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்ட சுகாதார துறையில் 48 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 13, மார்ச் 2025 8:20:44 PM (IST)

மாணவர்கள் உயர்கல்வி பயில ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
வியாழன் 13, மார்ச் 2025 3:59:08 PM (IST)

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் யாகசாலை அமைக்க கால்கோள் விழா: ஆட்சியர் பங்கேற்பு
புதன் 12, மார்ச் 2025 8:16:31 PM (IST)

கன்னிவெடிகளை கண்டறியும் எச்சரிக்கை கருவி கண்டுபிடிப்பு: நெல்லை மாணவனுக்கு டி.ஐ,ஜி. பாராட்டு
செவ்வாய் 11, மார்ச் 2025 5:15:37 PM (IST)

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதும் மாணவி : இட்டமொழியில் சோகம்
செவ்வாய் 11, மார்ச் 2025 12:20:54 PM (IST)

வாலிபரை தலை துண்டித்து கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை : நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 11, மார்ச் 2025 8:39:51 AM (IST)

PrakashFeb 19, 2025 - 12:47:11 PM | Posted IP 172.7*****