» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் கஞ்சா வழக்குகளில் கைதான 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!
திங்கள் 24, மார்ச் 2025 12:37:39 PM (IST)
திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா வழக்குகளில் கைதான 6 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான ஆறுமுகபாண்டி மகன் கணேஷ்முத்துகுமார் (37), நடராஜன் மகன் முருகபெருமாள் (27), மதியழகன் மகன் ரமேஷ் (வயது 24), கோவிந்தசாமி மகன் சக்திவேல் (28), லூர்து அற்புதராஜ் மகன் அலெக்ஸ்சற்குணம் (27) மற்றும் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ரவி சுப்பையா மகன் முத்துகுமார் (26) ஆகிய 6 நபர்கள் திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.
எனவே இந்த 6 பேர் மீதும் திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) வினோத் சாந்தாராம், பாளையங்கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் (பொறுப்பு) ஆவுடையப்பன், பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, நேற்று (23.03.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு அலுவலகங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் : அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 11:44:21 AM (IST)

பாளை சதக்கத்துல்லா கல்லூரியில் விலங்கியல் துறை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி
வெள்ளி 19, செப்டம்பர் 2025 11:16:26 AM (IST)

உரிமம் பெறாமல் செயல்படும் மனநல மையங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் சுகுமார் எச்சரிக்கை!
வியாழன் 18, செப்டம்பர் 2025 5:25:05 PM (IST)

வாலிபர் மீது கார் ஏற்றிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:39:54 AM (IST)

பிளாஸ்டிக் குடோன் தீவிபத்தில் 10 லட்சம் சேதம்: புகைமூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதி!!
வியாழன் 18, செப்டம்பர் 2025 11:36:24 AM (IST)

தாயை வெட்டிக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 18, செப்டம்பர் 2025 8:29:56 AM (IST)
