» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாநகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வியாழன் 10, ஏப்ரல் 2025 5:07:15 PM (IST)

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் சாலை பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் இரா சுகுமார் மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். கன்டிய பேரி மருத்துவமனை செல்லும் சாலை மற்றும் மருத்துவமனையில் உள் கட்டமைப்பு வசதிகள் முறையாக உள்ளனவா, போதுமான மருந்துக்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளார்களா எனவும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
அதனை தொடர்ந்து டவுண் தாமரைக்குளம் செல்லும் சாலை, கிழ ரத வீதி சாலை, சாமி சன்னதி சாலை மற்றும் அப்பகுதிகளில் மழை நீர் செல்லும் ஓடைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, தொடர்ந்து பேட்டை - பழைய பேட்டை இணைப்பு சாலையில் உள்ள கனரக வாகன முனையகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தொடர்ந்து சாலை பாதுகாப்பு குறித்தும் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்கள் மழைக்காலங்களில் வெள்ள நீர் தங்கு தடை இன்றி செல்வதற்கு வாய்க்கால்களை சரியான முறையில் தூர்வாரி எந்த விதமான அடைப்புகளும் இல்லாமல் கண்காணிக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள் மேலும் கோவிலுக்கு வரும் வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்பாக வாகன காப்பகங்களில் நிறுத்தி வைப்பதற்கும் முறையான ஏற்பாடுகள் செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவித்தார்கள்.
ந்த ஆய்வின் போது திருநெல்வேலி கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நைனார் குளம்சாலையில் சந்தை அருகில் வெள்ள நீர் கால்வாய் மற்றும்சாலை பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் நெல்லை மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடுகள் இழப்பிற்கான இழப்பீடு நிதியுதவி: ஆட்சியர் சுகுமார் வழங்கினார்
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:56:46 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் மே 1ஆம் தேதி மது விற்பனைக்கு தடை : ஆட்சியர் உத்தரவு
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:36:09 PM (IST)

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்!
திங்கள் 28, ஏப்ரல் 2025 12:35:26 PM (IST)

ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் : ஆட்சியர் தகவல்
திங்கள் 28, ஏப்ரல் 2025 10:30:19 AM (IST)

கார்கள் நேருக்கு நேர் மாேதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேர் பலி
திங்கள் 28, ஏப்ரல் 2025 9:06:47 AM (IST)

திருநெல்வேலியில் திருநங்கைகள் தினம் குறைதீர் முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
சனி 26, ஏப்ரல் 2025 4:43:20 PM (IST)
