» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
டென்னிஸ் விளையாட்டு பயிற்றுநர் நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 11, ஏப்ரல் 2025 5:36:32 PM (IST)
டென்னிஸ் பயிற்றுநர் நியமனத்திற்கு தகுதியானவர்கள் மாவட்ட விளையாட்டு பயிற்சி மையத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான மான்ய கோரிக்கையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கிவரும் 38 மாவட்டங்களிலும் SDAT STAR - ( SPORTS TALENT ADVANCEMENT & RECOGNITION) ஸ்டார் அகாடமி வெவ்வெறு விளையாட்டுக்களுடன் மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் அமைத்திட அறிவிக்கப்பட்டதின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் ஸடார் அகாடமி டென்னிஸ் விளையாட்டு மே 1 2025 முதல் செயல்படுத்தப்படவுள்ளது.
டென்னிஸ் பயிற்றுநர் : இந்த ஸ்டார் அகாடமி டென்னிஸ் பயிற்சி மையத்திற்கு டென்னிஸ் பயிற்றுநர் நியமனம் செய்யப்படவுள்ளதால் பயிற்றுநர் நியமனத்திற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பயிற்றுநருக்கான மாத ஊதியம் ரூ.25,000/-
பயிற்றுநர் பணிக்கு தகுதியானவர்கள் அண்ணா விளையாட்டரங்கத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பம் பெற்றிடுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. பயிற்றுநர் பணிக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 20.4.2025 மாலை 5.45 மணி வரை.
பயிற்றுருக்கான தகுதிகள் :M.Sc. Sports coaching issued by National Institute of Sports (NIS) Sports Authority of India (or) One year Diploma /Certificate in sports coaching of not less than 10 months. 2.License Course conducted by International Sports Federation and 6 weeks certificate coaches course conducted by Netaji Subhas Institute of Sports at Patiala.
டென்னிஸ் விளையாட்டு மையம் மாணவர் /மாணவியர்கள் சேர்க்கை : இத்திட்டத்தின் கீழ் 20 மாணவர்கள் 20 மாணவியர்கள் மொத்தம் 40 பேர்கள் சேர்க்கப்படவுள்ளார்கள். 12 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் இப்பயிற்சி மையத்தின் கீழ் தேர்வு செய்யப்படவுள்ளார்கள். விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் - டென்னிஸ் விளையாட்டில் பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் - டென்னிஸ் விளையாட்டிற்கு தேர்வு நாள் : 28.4.2025 காலை 7.00 மணியளவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறும். தகுதியின் அடிப்படையில் மாணவ / மாணவியர்கள் சேர்க்கப்படவுள்ளார்கள். இப்பயிற்சி மையத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவ /மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் ,காலை சிற்றுண்டி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடுகள் இழப்பிற்கான இழப்பீடு நிதியுதவி: ஆட்சியர் சுகுமார் வழங்கினார்
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:56:46 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் மே 1ஆம் தேதி மது விற்பனைக்கு தடை : ஆட்சியர் உத்தரவு
திங்கள் 28, ஏப்ரல் 2025 4:36:09 PM (IST)

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்!
திங்கள் 28, ஏப்ரல் 2025 12:35:26 PM (IST)

ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் : ஆட்சியர் தகவல்
திங்கள் 28, ஏப்ரல் 2025 10:30:19 AM (IST)

கார்கள் நேருக்கு நேர் மாேதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேர் பலி
திங்கள் 28, ஏப்ரல் 2025 9:06:47 AM (IST)

திருநெல்வேலியில் திருநங்கைகள் தினம் குறைதீர் முகாம் : ஆட்சியர் இரா.சுகுமார் பங்கேற்பு
சனி 26, ஏப்ரல் 2025 4:43:20 PM (IST)
