» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாளை., அருகே பைக் மீது கார் மோதியதில் கணவன்-மனைவி பலி : மகன் படுகாயம்
ஞாயிறு 13, ஏப்ரல் 2025 12:21:10 PM (IST)
பாளையங்கோட்டை அருகே பைக் மீது கார் மோதியதில் கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆறாம்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் பாதாளமுத்து (45). லாரி டிரைவர். இவருடைய மனைவி கோதை நாச்சியார் (43). இவர்களுடைய மகன் சுரேஷ் (16), அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பங்குனி உத்திர விழாவையொட்டி பாதாளமுத்து மோட்டார் சைக்கிளில் மனைவி, மகனுடன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். அவர்கள் கோவிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு மீண்டும் நெல்லை வழியாக ஆறாம்பண்ணை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
பாளையங்கோட்டை அருகே வி.எம்.சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது, எதிரே திருச்செந்தூர் பகுதியில் இருந்து செங்கோட்டை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த கார் எதிர்பாராதவிதமாக பாதாளமுத்து ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது பயங்கரமாக மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த பாதாளமுத்து, கோதை நாச்சியார், சுரேஷ் ஆகிய 3 பேரும் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர்.
உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோதை நாச்சியார் பரிதாபமாக இறந்தார். பாதாளமுத்து, சுரேஷ் ஆகியோரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி பாதாளமுத்து நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார்.
சுரேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டை அருகே கோவிலுக்கு சென்று திரும்பியபோது, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கணவன்-மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
சனி 19, ஏப்ரல் 2025 12:52:34 PM (IST)

ஜவுளிக்கடை உரிமையாளர் தலை துண்டித்து கொலை: இளம்பெண் கைது
சனி 19, ஏப்ரல் 2025 9:03:58 AM (IST)

பொதுமக்களுக்கு உதவிட சட்டபணிகள் ஆணைய குழு தயார்: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:32:31 PM (IST)

முன்னாள் எஸ்.ஐ., கொலை வழக்கில் பெண் கைது: 4பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:36:07 PM (IST)

வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.89.75 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:45:53 PM (IST)
