» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தாழையூத்து மேம்பாலத்தில் வாகன விபத்து : பள்ளி தலைமை ஆசிரியர் பரிதாப சாவு
சனி 3, மே 2025 3:26:17 PM (IST)

தாழையூத்து சங்கர் நகர் மேம்பாலத்தில் ஸ்கூட்டர் மீது வாகனம் மோதிய விபத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே பள்ளமடை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் 59. இவரது வீடு பாளை., சிவன் கோவில் மேலரதவீதியில் உள்ளது. தினமும் பள்ளிக்கு காரில் செல்வார். தற்போது விடுமுறையில் இருந்தார். நேற்று பள்ளியில் ஒரு மாணவன் புதிதாக சேர்ந்தார். அந்த ஒரு மாணவன் சேர்க்கைக்காக தலைமை ஆசிரியர் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பள்ளிக்கு சென்றார்.
பின்னர் மதியம் வீடு திரும்பினார். தாழையூத்து சங்கர் நகர் மேம்பாலத்தில் வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு உடல் நசுங்கியது. சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் அணிந்திருந்த ஹெல்மெட் அவரது தலையிலேயே இருந்தது. தாழையூத்து போலீசார் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர்கள் நலனில் எப்போதும் அக்கறை கொண்ட தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் அடுத்த ஆண்டு ஓய்வு பெற இருந்தார். பள்ளியில் பணியில் இருந்த ஆசிரியர்கள் ஒரு மாணவன் சேர்க்கையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் வரவேண்டாம் என கூறிய போதும்கூட அவர் டூவீலரில் பள்ளிக்கு சென்று திரும்பியபோது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செல்போன் பறித்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
ஞாயிறு 18, மே 2025 9:07:08 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க. நிர்வாகி மீது போக்சோ வழக்குப்பதிவு
ஞாயிறு 18, மே 2025 9:04:32 PM (IST)

நாங்குநேரி அருகே 754 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு : காவல்துறை நடவடிக்கை
ஞாயிறு 18, மே 2025 10:44:15 AM (IST)

பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கு: ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது!
சனி 17, மே 2025 12:22:27 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் கனமழையால் மின்தடை: மின்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
சனி 17, மே 2025 11:14:31 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகள் உற்சாக வரவேற்பு!
வெள்ளி 16, மே 2025 4:09:33 PM (IST)
