» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பத்தாம் வகுப்பு தேர்வு: நெல்லை மாவட்டத்தில் 94.16% மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி!
வெள்ளி 16, மே 2025 3:32:32 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.16% மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1 தேர்வில் 93.42% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், வாழ்த்து, மாணவர்கள் கல்வி ஆலோசனை பெறுவதற்கு உயர்கல்வி வழிகாட்டி மையத்தினை அணுகலாம்
திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2025 பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு நடைபெற்றது. பொதுத் தேர்விற்கான முடிவுகள் இன்று (16.05.2025) வெளியிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 2025-ல் மொத்தம் 285 பள்ளிகளில் 22,533 மாணவ, மாணவியர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 21,216 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 10,038 மாணவிகளும் 91.85% சதவீதமும், 11,178 மாணவர்கள் 96.33 % சதவீதமும் என மொத்தம் 94.16% மாணவ, மாணவியர்கள் மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.27 அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வில் 2025-ல் மொத்தம் 188 பள்ளிகளில் 20,025 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 8,020 மாணவர்கள் 89.68% சதவீதமும், 10,688 மாணவியர்கள் 96.44 % சதவீதமும் என மொத்தம் 18,708 மாணவ. மாணவியர்கள் 93.42 % சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வில் 56 அரசு மேல்நிலை பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி மையம் செயல்படுகிறது. மாணவர்கள் கல்வி ஆலோசனை பெற 9500324417, 9500524417 ஆகிய எண்களை தொடர்புக்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்வினைக் கொண்டாடுவோம் சிறப்பு பயிலரங்கம் : நடிகர் தாமு பங்கேற்பு
வெள்ளி 20, ஜூன் 2025 8:47:57 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
வெள்ளி 20, ஜூன் 2025 5:45:04 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:28:41 PM (IST)

நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 20, ஜூன் 2025 3:55:50 PM (IST)

அரசு பஸ்சின் அச்சு முறிந்து சாலையில் ஓடிய சக்கரங்கள்: 3 மாணவர்கள் படுகாயம்!!
வெள்ளி 20, ஜூன் 2025 3:25:32 PM (IST)

வெளிநாட்டில் வேலை தருவதாக ரூ.10.87 லட்சம் மோசடி வழக்கில் பெண் கைது!
வெள்ளி 20, ஜூன் 2025 8:53:23 AM (IST)
