» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு: ரத்து செய்யக் கோரி சார்பதிவாளரிடம் மனு!!

சனி 17, மே 2025 11:20:51 AM (IST)



கோவில்பட்டியில் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்த பத்திர பதிவை ரத்து செய்ய வேண்டும் சார்பதிவாளரிடம்  புரட்சி பரதம் கட்சியினர் மனு அளித்தனர்.

இது தொடர்பாக கோவில்பட்டி சார்பதிவாளரிடம், புரட்சி பரதம் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில் "கோவில்பட்டி வட்டம் ஆலம்பட்டி கிராமத்தில் சர்வே எண் 230/1C8  நிலத்தினை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து அரசு அலுவலர்களை ஏமாற்றி போலியாக பத்திர பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பத்திர பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதில்  கோவில்பட்டி நகர செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட பொறியாளர் துறை மாவட்ட செயலாளர் கணேசன் மற்றும்  நிர்வாகிகள் பாப்பண்டு மாரிசாமி  உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

Goodமே 18, 2025 - 08:30:18 PM | Posted IP 172.7*****

Good

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory