» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நாங்குநேரி அருகே 754 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிப்பு : காவல்துறை நடவடிக்கை
ஞாயிறு 18, மே 2025 10:44:15 AM (IST)
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தனியார் நிறுவனத்தில் 754 கிலோ கஞ்சா தீயிலிட்டு அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 171 வழக்குகளில் மொத்தம் 754 கிலோ 333 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பொத்தையடி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் தீயிலிட்டு அழிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மூர்த்தி தலைமையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், சிவகங்கை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ், ராமநாதபுரம் மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் தடய அறிவியல் துறை சிவராஜ் ஆகியோர் முன்னிலையில், கஞ்சாவை தீயிலிட்டு அழித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெள்ள பாதிப்புகளைத் தடுக்கப் போர்க்கால நடவடிக்கை : ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு!
சனி 16, மே 2026 11:07:43 AM (IST)

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)

கோடை மழையால் குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
சனி 9, மே 2026 9:00:15 AM (IST)


