» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நாளை திருமணம்: காதல் விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை - தூத்துக்குடி அருகே சோகம்!!
சனி 24, மே 2025 11:36:45 AM (IST)
தூத்துக்குடி அருகே நாளை காலை திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர், மேலமடம், கீழத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் சரண்யா (23). இவர் பசுவந்தனை அருகேயுள்ள போடிநாயக்கனூரில் மக்கள் நல பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தாய் - தந்தை இல்லாததால் தனது அக்கா வீட்டில் வசித்து வந்தார்
இதற்கிடையே சரண்யா அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்ததாக தெரிகிறது. ஆனால் அவரது அக்கா, வேறு ஒருவருடன் திருமணம் பேசி முடித்துள்ளார். நாளை (25ஆம் தேதி) திருமணம் நடக்க இருந்த நிலையில் இவர்களது காதல் விவரத்தில் நேற்று தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சரண்யா நேற்று இரவு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறத்து தகதவல் அறிந்து புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவிலுக்கு செம்பு வேல் காணிக்கையாக வழங்கிய மோகன்லால்!
வெள்ளி 30, மே 2025 9:08:18 AM (IST)

பைக் மீது லாரி மோதிய விபத்தில் நீதிமன்ற ஊழியர் பலி : புளியங்குடியில் சோகம்!
வியாழன் 29, மே 2025 8:03:16 PM (IST)

கமல்ஹாசன் கருத்தில் எந்தத் தவறும் இல்லை: நெல்லையில் சபாநாயகர் அப்பாவு
வியாழன் 29, மே 2025 5:27:57 PM (IST)

பொதுமக்களுக்கு தொல்லை : 33 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறை!
வியாழன் 29, மே 2025 10:45:40 AM (IST)

கேபிள் டிவி வயரை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு!
வியாழன் 29, மே 2025 10:43:02 AM (IST)

ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் 7 வினாடி சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு
புதன் 28, மே 2025 12:09:44 PM (IST)

Mmmssssமே 25, 2025 - 11:05:03 AM | Posted IP 162.1*****