» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாளை திருமணம்: காதல் விவகாரத்தில் இளம்பெண் தற்கொலை - தூத்துக்குடி அருகே சோகம்!!

சனி 24, மே 2025 11:36:45 AM (IST)

தூத்துக்குடி அருகே நாளை காலை திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர், மேலமடம், கீழத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் சரண்யா (23). இவர் பசுவந்தனை அருகேயுள்ள போடிநாயக்கனூரில் மக்கள் நல பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தாய் - தந்தை இல்லாததால் தனது அக்கா வீட்டில் வசித்து வந்தார் 

இதற்கிடையே சரண்யா அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்ததாக  தெரிகிறது. ஆனால் அவரது அக்கா, வேறு ஒருவருடன் திருமணம் பேசி முடித்துள்ளார். நாளை (25ஆம் தேதி) திருமணம் நடக்க இருந்த நிலையில் இவர்களது காதல் விவரத்தில் நேற்று தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சரண்யா நேற்று இரவு தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறத்து தகதவல் அறிந்து புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

Mmmssssமே 25, 2025 - 11:05:03 AM | Posted IP 162.1*****

🥺🥺🥺🥺🥺

இந்தமே 24, 2025 - 05:08:22 PM | Posted IP 172.7*****

2k kids இப்படிதான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory