» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் மீனவர் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை

செவ்வாய் 27, மே 2025 10:58:57 AM (IST)

தூத்துக்குடியில் மீனவர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்தவர் ஜேக்கப் மகன் திபூர்சியஸ் சந்துரு (40). மீனவரான இவர் தினமும் மது குடித்துவிட்டு விட்டிற்கு வந்து தகராறு செய்வாராம். இதுபோல் நேற்றும் குடித்துவிட்டு வந்து, தனது தாயாரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் அவர் படுத்து உறங்கி விட்டார். 

இந்நிலையில் இன்று காலையில் பார்த்தபோது அவர் படுக்கையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தாரா? மாரடைப்பால் இறந்தாரா? என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து

Darwinமே 28, 2025 - 07:06:29 AM | Posted IP 172.7*****

Fake fraud news channel

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory