» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் மீனவர் மர்ம மரணம்: போலீஸ் விசாரணை
செவ்வாய் 27, மே 2025 10:58:57 AM (IST)
தூத்துக்குடியில் மீனவர் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்தவர் ஜேக்கப் மகன் திபூர்சியஸ் சந்துரு (40). மீனவரான இவர் தினமும் மது குடித்துவிட்டு விட்டிற்கு வந்து தகராறு செய்வாராம். இதுபோல் நேற்றும் குடித்துவிட்டு வந்து, தனது தாயாரிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் அவர் படுத்து உறங்கி விட்டார்.
இந்நிலையில் இன்று காலையில் பார்த்தபோது அவர் படுக்கையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தாரா? மாரடைப்பால் இறந்தாரா? என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவிலுக்கு செம்பு வேல் காணிக்கையாக வழங்கிய மோகன்லால்!
வெள்ளி 30, மே 2025 9:08:18 AM (IST)

பைக் மீது லாரி மோதிய விபத்தில் நீதிமன்ற ஊழியர் பலி : புளியங்குடியில் சோகம்!
வியாழன் 29, மே 2025 8:03:16 PM (IST)

கமல்ஹாசன் கருத்தில் எந்தத் தவறும் இல்லை: நெல்லையில் சபாநாயகர் அப்பாவு
வியாழன் 29, மே 2025 5:27:57 PM (IST)

பொதுமக்களுக்கு தொல்லை : 33 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறை!
வியாழன் 29, மே 2025 10:45:40 AM (IST)

கேபிள் டிவி வயரை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு!
வியாழன் 29, மே 2025 10:43:02 AM (IST)

ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் 7 வினாடி சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு
புதன் 28, மே 2025 12:09:44 PM (IST)

Darwinமே 28, 2025 - 07:06:29 AM | Posted IP 172.7*****