» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மாநிலங்களவை தேர்தலில் மீனவ உறுப்பினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 27, மே 2025 3:41:00 PM (IST)
வரும் மாநிலங்களவை தேர்தலில் மீனவ உறுப்பினர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு அகில இந்திய மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தேசிய தலைவர் அன்டன்கோம்ஸ், தமிழக முதல் அமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "சுதந்திர இந்தியாவில், கடந்த 78 ஆண்டுகளில் மீனவ சமூகம் பாராளுமன்ற பிரதிநித்துவமற்ற சமூகமாக, ஒன்றிய அரசால் இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கேட்க நாதியற்ற சமூகமாக, தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது.
40ஆண்டுகளாக தொடரும் இலங்கை கப்பற்படையின் படுகொலைகள், ஒன்றிய பட்ஜெட்டில்,மற்ற தொழில் பிரிவுகளுக்கு ஒதுக்குவது போல், மீனவர்களின்,நாட்டின் மொத்த உற்பத்தியில் பங்களிப்பின் (G.D.P) அடிப்படையில் நிதி ஒதுக்காதது, மண்டல் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் மீனவர்களை பழங்குடி பட்டியலில் இணைக்காதது, மீனவர் பயன்படுத்தும் எரி பொருளுக்கு (டீஸல்) சம்மந்தமில்லாத சாலை வரி,, பசுமை வரி விதிக்கப்படுவது, மீன் வளத்துறைக்கு நிதி ஒதுக்கீடு என்ற பெயரில்,கார்ப்பரேட் களின் மீன் பண்ணைகளுக்கு நிதி ஒதுக்குவது,
மீனவர் வாழ்வாதார, வாழ்வுரிமைகளை பறிக்கும் வகையில் கடலில் தனியார் துறைமுகங்கள், கடலிலும் கரையிலும் கனிம சுரங்கங்கள்,எரி வாயு, ஹைடிரோ கார்பன் etc வகைகளுக்காக கடலையும்,கடற்கரையையும் கார்ப்பரேட்களுக்கு குத்தகைக்கு விடுவது,
சாகர் மாலா உள்ளிட்ட வளர்ச்சி என்ற பெயரில் நீளும்,பாரம்பரிய மீனவர்களை கடலிலிருந்தும், கரையிலிருந்தும் அப்புறப்படுத்தி,மீன்பிடி தொழிலை கார்ப்பரேட் மயமாக்கும் சதி திட்டம் எனும் சொல்லப்படாத துயரங்களால், இழைக்கப்படும் அநீதிகளை களைய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அவசியமாகிறது. மீனவர்களும் இந்திய குடிமக்கள், தங்களின் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்ய, பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தவிர்க்க முடியாததாகிறது.
நாட்டின் அனைத்து சமூகங்களின் தேவைகளை உணர்ந்து அரசு திட்டங்களை வகுக்கிறது.ஆனால் மீனவர் தேவைகள் அரசுக்கு புரிவதில்லை. காரணம் ஆளும் அரசியல் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் நிலம் சார்ந்தவர்களாக உள்ளனர்.இதனால் மீனவர் கோரிக்கைகளை, தேவையற்ற விஷயமாக கருதுகின்றனர்.
கடல் மற்றும் மீன்வளம் தொடர்பான சட்டங்களும், திட்டங்களும் மீனவர் பங்களிப்பின்றி, அறிவியல் பூர்வமற்றதாக அறிவிக்கப்பட்டு, மக்களின் போராட்டங்களால் முறியடிக்கப்பட்டன. (உ-ம் கடலோர மேலாண்மை மண்டல(CMZ) அறிவிப்பாணை, கடல் மீன்பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்டம் 2010,மீனா குமாரி கமிஷன்அறிக்கை etc.)
அறிவியல் பூர்வமற்ற முறையில் மீன்பிடி தடை காலம் கிழக்கு கடற்கரையில்,மீன் இன பெருக்க காலமான வடகிழக்கு பருவமழை காலமான நவம்பர்,டிசம்பர் தவிர்த்து ஏப்ரல்,மே என அறிவிக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படுவதோடு, அந்நியர் நம் மீன் வளத்தை,அனுமதியின்றி கொள்ளையிட வாய்ப்பளிக்கப்படுகிறது.
தடை சொய்யப்ப்பட்ட மீன்கள் வரிசையில்,சில பகுதிகளில் சில காலங்களில் அபரிமிதமாக கிடைகுக்கும் மீன்கள்(உ-ம் இராமேஸ்வரத்தில் கடல் அட்டைகள்) அழியும் வகையாக(endangered species), தடை செய்யப்பட்டுள்ளது. இவையெல்லாம் வெளிநாட்டவர் தங்கள் நலனுக்காக வகுத்த விதிகளை, கண்மூடி தனமாக கடலை பற்றி புரிதல் இல்லாத அதிகாரிகள் அமல்படுத்துவதும் அதனை கேள்வி கேட்க உரிய அரசியல் பிரதிநித்துவம் இல்லாததால் நடக்கும் அரசியல் அவலம் .
சங்கு வகைகளில் நம் கடலில் இல்லாத சங்குகளும் சேர்க்கப்பட்டு, அந்த சங்கு தான் என சந்தேகத்தின் அடிப்படையில் மீனவர்கள் கைதாகி,அந்த சங்கு பட்டியலில் உள்ளதல்ல என. ஆய்வக முடிவு வரும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய கொடுமை நடைமுறையில் உள்ளது.
அடிப்படையில் மீன்பிடி தொழில் வேட்டையாடும் தொழில். அதுவும் குறிபார்த்து, குறிப்பிட்ட மீனை வேட்டையாடும் தொழில் (selective hunting)அல்ல, வலையில் வரும் மீன்கள், தானாக வந்து விழுபவை. எந்த மீன்கள் வலையில் விழுகிறது என்பது மீனவர் அறிவதில்லை.
இந்நிலையில்,தடை செய்யப்பட்ட மீனை பிடித்தார் என மீனவருக்கு தண்டனை வழங்குவது, அதுவும் சில மீன்களுக்கு கடுமையான தண்டனை என்பதும்,குறிப்பாக வலையில் தானாக சிக்கி உயிரிழந்த கட்ல் பசு வந்தால்,அது சிங்கத்தை (shedule one) சுட்டதற்கு சமமான தண்டனை விதிக்கப்படும். இத்தகைய கொடுமைகளுக்கு காரணம், மீனவர்களுக்கு அரசியல் பிரதிநித்துவம் இல்லாததுதான்.
நிலமும் கடலும் சார்ந்த இந்திய அரசுக்கு, கடல் சார் மக்களின் துயரங்களை விளக்கி, உரிமைகளை பெற,முழுமையாக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பிரதிநித்துவம் இல்லாத நிலையில், சமூக நீதி முழக்கமிடும் திமுக, சார்பில் வரும் மாநிலங்களவை தேர்தலில் மீனவர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டுகிறோம் தென் மாவட்ட மீனவர்கள் சிறுபாண்மை கிறிஸ்தவராக இருந்தும், மீனவர் என்ற வகையிலோ, சிறுபாண்மையோர் என்ற வகையிலோ எந்தவித வாய்ப்பும் வழங்கப்படாத வேதனை, காலங்காலமாக தொடர்கதையாக உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசால் மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கேட்க, திமுக மீனவர் ஒருவருக்கு மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பளிக்க வேண்டுகிறோம். மதசார்பற்ற கூட்டணியின் ஒட்டு மொத்த ஆதரவாளர்களாக, கடந்த காலங்களில் தங்களுக்கு வாக்களித்த தென்மாவட்ட மீனவர்களில் ஒருவருக்கு வாய்ப்பளிப்பதன் மூலம், மீனவர் மற்றும் சிறுபாண்மையோர் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும் என்பதை தங்கள் கவனத்திற்கு சமர்பிக்கின்றோம்.
வரும் மாநிலங்களவை தேர்தலில், கற்றறிந்த, மீனவர் வாழ்நிலை அறிந்த, மீனவர் போராட்ட களம் கண்ட, வாத திறமை மிக்க, திமுக மீனவ உறுப்பினர் ஒருவருக்கு வாய்ப்பளித்து, மீனவ சமூகத்தை சூழ்ந்துள்ள அரசியல் இருளகற்றி, விடியலுக்கு, வழிகாட்டுவீர்கள் என நம்புகிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவிலுக்கு செம்பு வேல் காணிக்கையாக வழங்கிய மோகன்லால்!
வெள்ளி 30, மே 2025 9:08:18 AM (IST)

பைக் மீது லாரி மோதிய விபத்தில் நீதிமன்ற ஊழியர் பலி : புளியங்குடியில் சோகம்!
வியாழன் 29, மே 2025 8:03:16 PM (IST)

கமல்ஹாசன் கருத்தில் எந்தத் தவறும் இல்லை: நெல்லையில் சபாநாயகர் அப்பாவு
வியாழன் 29, மே 2025 5:27:57 PM (IST)

பொதுமக்களுக்கு தொல்லை : 33 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறை!
வியாழன் 29, மே 2025 10:45:40 AM (IST)

கேபிள் டிவி வயரை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு!
வியாழன் 29, மே 2025 10:43:02 AM (IST)

ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் 7 வினாடி சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு
புதன் 28, மே 2025 12:09:44 PM (IST)

TORCHமே 27, 2025 - 03:46:21 PM | Posted IP 162.1*****