» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டிரைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: 2பேர் கைது!

செவ்வாய் 27, மே 2025 8:14:16 PM (IST)

நாசரேத் அருகே கடன் தகராறில் டிரைவரடி சரமாரியாக அரிவாளால் வெட்டியது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள நெய்விளையை சேர்ந்த மாயாண்டி மகன் சதீஷ்(24). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் பிள்ளை விளையை சேர்ந்த முத்து ராமலிங்கம் மகன் முத்துக்குமாரிடம் (33) சில மாதங்களுக்கு முன்பு ரூ.4,000 கடன் வாங்கியுள்ளார். கொடுத்த கடனை திரும்ப தரக்கோரி முத்துக்குமார் சதீஷிடம் பலமுறை கேட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் தட்டிக் கழித்துவந்த சதீஷ் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 25ம் தேதி மாலை பிள்ளையன்மனை பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சதீஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த முத்துக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சதீஷை வழிமறித்து கொடுத்த கடனை திரும்ப கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சதீஷை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். 

காயமடைந்த சதீஷ் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்த புகாரின் பேரில் நாசரேத் எஸ்ஐ சுந்தரம் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் வனசுந்தர் விசாரணை நடத்தி டிரைவரை அரிவாளால் வெட்டி காயப்படுத்திய பிள்ளைவிளையை சேர்ந்த முத்துக்குமார், காபிரியேல் மகன் லியோன்ராஜ்(29) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக பலரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து

சங்கர்மே 29, 2025 - 06:01:57 PM | Posted IP 104.2*****

பொய் கேஸ் போட்டு உள்ள தளுரங்க பாவம்... சட்டம் தன் கடமை செயகின்றார்கள்... பாருதேன்... ஆனால் சட்டம் பணம் இருக்கும் வண்ட சட்டம் பாதுகாப்பு குடுக்குது ..... நெருல கண் கூட பார்த்துதான் நம்ப வேண்டிய தான் இருக்கும்..... ஜெய் கிண்ட்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory