» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
டிரைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: 2பேர் கைது!
செவ்வாய் 27, மே 2025 8:14:16 PM (IST)
நாசரேத் அருகே கடன் தகராறில் டிரைவரடி சரமாரியாக அரிவாளால் வெட்டியது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் கடந்த 25ம் தேதி மாலை பிள்ளையன்மனை பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சதீஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த முத்துக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சதீஷை வழிமறித்து கொடுத்த கடனை திரும்ப கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சதீஷை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
காயமடைந்த சதீஷ் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்த புகாரின் பேரில் நாசரேத் எஸ்ஐ சுந்தரம் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் வனசுந்தர் விசாரணை நடத்தி டிரைவரை அரிவாளால் வெட்டி காயப்படுத்திய பிள்ளைவிளையை சேர்ந்த முத்துக்குமார், காபிரியேல் மகன் லியோன்ராஜ்(29) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக பலரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பண்பொழி திருமலைக்குமாரசாமி கோவிலுக்கு செம்பு வேல் காணிக்கையாக வழங்கிய மோகன்லால்!
வெள்ளி 30, மே 2025 9:08:18 AM (IST)

பைக் மீது லாரி மோதிய விபத்தில் நீதிமன்ற ஊழியர் பலி : புளியங்குடியில் சோகம்!
வியாழன் 29, மே 2025 8:03:16 PM (IST)

கமல்ஹாசன் கருத்தில் எந்தத் தவறும் இல்லை: நெல்லையில் சபாநாயகர் அப்பாவு
வியாழன் 29, மே 2025 5:27:57 PM (IST)

பொதுமக்களுக்கு தொல்லை : 33 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறை!
வியாழன் 29, மே 2025 10:45:40 AM (IST)

கேபிள் டிவி வயரை சரி செய்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு!
வியாழன் 29, மே 2025 10:43:02 AM (IST)

ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் 7 வினாடி சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு
புதன் 28, மே 2025 12:09:44 PM (IST)

சங்கர்மே 29, 2025 - 06:01:57 PM | Posted IP 104.2*****