» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் இளம்பெண் பாலியல் புகார் : வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!

வியாழன் 29, மே 2025 3:41:33 PM (IST)

தூத்துக்குடியில் இளம்பெண்ணுக்கு ஒருவர் பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் விடுத்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி நகரில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம்பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஏற்கனவே தென்மலை தென்குமரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்தாராம். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையம், ஊரக துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  புகார் அளித்தும் காவல்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், மாநிலம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்தார். இதனிடையே தென்மலை தென்குமரனை இளம்பெண் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக தென்மலை தென்குமரன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இளம்பெண் மீது பிசிஆர் வழக்கு பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில், இளம்பெண் புகார் தொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விசாரணையில் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory