» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சேரன்மகாதேவி வட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
வியாழன் 19, ஜூன் 2025 11:22:53 AM (IST)

சேரன்மகாதேவி வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம், "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” சேரன்மகாதேவி வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார் ஆய்வு மேற்கொண்டார். ”உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டத்திலும் முதற்கட்ட சுற்று நிறைவுபெற்று, இரண்டாம் சுற்றாக மானூர், அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, திசையன்விளை, நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய வட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு இன்றையதினம் ஏழாம் வட்டமாக சேரன்மகாதேவி வட்டத்திற்குட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, ஒவ்வொரு திட்டங்கள் குறித்தும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சேரன்மகாதேவி வட்டம், 15வது நிதி குழு சுகாதார மானியம் 2023-2024 திட்டத்தின் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் துணை சுகாதார நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதையும், மற்றும் பிரான்சேரி பகுதிகளில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் துணை சுகாதார நிலையம் அமைத்தல் பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்களால் நேரடி கள ஆய்வு செய்து, துணை சுகாதார நிலைய கட்டிடங்கள் 75 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுவிட்டது. பொதுமக்களின் பொது மருத்துவம் மற்றும் சுகாதார பணி என்பதால் காலம் தாழ்த்தாது மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்திடுமாறு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மேலச்செவல் பேரூராட்சியில் மூலதன மான்ய திட்டம் 2023-24ன் கீழ் வார்டு எண்.6 செல்விபுரத்தில் 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியினையும், மேலச்செவல் பேரூராட்சி அம்ரூத் 2.0 2022-23 திட்டத்தின் கீழ் வார்டு 13 கொழுமடையில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு பேரூராட்சி செயல் அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும், பத்தமடை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவேடுகள், போதுமான அளவு மருந்துகளின் இருப்புகள் குறித்தும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், கர்ப்பிணி தாய்மார்கள் பதிவு விபரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், மணிமுத்தாறு முதல்மடையின் கீழ் திருவித்தான்புள்ளி பகுதியில் நீர்வளதுறையின் சார்பில் ரூ. 5.00 கோடி மதிப்பீட்டில் கால்வாய் பகுதியில் மண் சரிவதை தடுக்கும் பொருட்டு 154 மீட்டர் நீளத்திற்கு மூடிய நிலை கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, சேரன்மாதேவி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.94.24 லட்சம் மதிப்பில் நான்கு வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்ததோடு, பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டவரும் மதிய உணவு தரம் மற்றும் சுவை குறித்து மாவட்ட ஆட்சியர் உணவு உட்கொண்டு ஆய்வு செய்தார்கள்.
மேலும், சேரன்மகாதேவி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சங்கத்தின் பால் உற்பத்தியினை அதிகரிக்கவும் சங்கத்தில் மூலம் பால் உப பொருட்கள் மொத்த விற்பனை நிலையம் அமைக்க வேண்டும் என்றும் சங்கத்தின் கீழ் உள்ள உறுப்பினர் அனைவருக்கும் கறவை மாட்டு கடன் மற்றும் பராமரிப்பு கடன் பெற்று வழங்கிட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, முக்கூடல் காவல்நிலையத்தினை பார்வையிட்டு, பதிவேடுகள் குறித்தும், அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) வில்லியம் ஜேசுதாஸ், செயற்பொறியாளர் கோவிந்தராஜ், உதவி பொறியாளர் ரமேஷ்குமார், வட்டாட்சியர் காஜா கரிபூன் நவாஸ், ஆவின் துணைப் பதிவாளர் சைமன் சார்லஸ், ஆவின் உதவி பொது மேலாளர் சரவணமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் வேல்முருகன், பொதுப்பணித் துறை கட்டுமானம் கண்காணிப்பாளர் உதயகுமார், உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேர்வினைக் கொண்டாடுவோம் சிறப்பு பயிலரங்கம் : நடிகர் தாமு பங்கேற்பு
வெள்ளி 20, ஜூன் 2025 8:47:57 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆலோசனை!
வெள்ளி 20, ஜூன் 2025 5:45:04 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:28:41 PM (IST)

நெல்சாகுபடிக்கு சிறப்புத் தொகுப்புத் திட்டம் : ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்
வெள்ளி 20, ஜூன் 2025 3:55:50 PM (IST)

அரசு பஸ்சின் அச்சு முறிந்து சாலையில் ஓடிய சக்கரங்கள்: 3 மாணவர்கள் படுகாயம்!!
வெள்ளி 20, ஜூன் 2025 3:25:32 PM (IST)

வெளிநாட்டில் வேலை தருவதாக ரூ.10.87 லட்சம் மோசடி வழக்கில் பெண் கைது!
வெள்ளி 20, ஜூன் 2025 8:53:23 AM (IST)
