» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தேர்வினைக் கொண்டாடுவோம் சிறப்பு பயிலரங்கம் : நடிகர் தாமு பங்கேற்பு

வெள்ளி 20, ஜூன் 2025 8:47:57 PM (IST)



தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் அரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கு தேர்வு பயம் நீக்கும் சிறப்பு பயிலரங்கம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக மாணவர் பயிற்சியாளர் நடிகர் தாமு உரையாற்றினார். இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இப்பயிலரங்கத்தில் 12ம் வகுப்பில் (2024-2025 கல்வி ஆண்டில்) அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றனர். 

சிறப்பு பயிலரங்கு ஏற்பாட்டினை சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஏற்பாடு செய்திருந்தார். அரசுப்பள்ளி ஆசிரியர் சங்கர்ராம் தொகுத்து வழங்கினார். கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) செந்தில்குமார், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கீதாவேணி மேலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரெஜினா வாழ்த்துரை வழங்கினார். மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.சிறப்பு ஊர்திகள் மூலம் மாணவ மாணவிகள் மூலம் மீண்டும் பள்ளிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory