» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஈரான் நாட்டில் தவிக்கும் திருநெல்வேலி மாவட்ட மீனவர்களை மீட்க கோரி சபாநாயகரிடம் மனு!

சனி 21, ஜூன் 2025 8:04:28 PM (IST)



ஈரான் போர் பிரச்சினையால் ஈரான் நாட்டின் அருகில் மீன்பிடித்தொழில் செய்யும் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த மீனவர்களை தொடர்பு கொள்வது குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், ஆகியோரை சந்தித்து மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை அளித்தனர். 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (21.06.2025) ஈரான் நாட்டின் அருகில் மீன்பிடித்தொழில் செய்யும் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த மீனவர்களை ஈரான் போர் பிரச்சினையால் தொடர்புகொள்ள முடியாததால், அவர்களை தொடர்புக்கொள்வது குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு , மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், ஆகியோரை சந்தித்து மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். 

இந்நிகழ்வில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில்: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து ஈரான் நாட்டின் அருகிலுள்ள தீவுகளில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஈரான் போர் பிரச்சினையால் அங்கு பணி செய்யும் தமிழக மீனவர்களை தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ளது. உவரி பகுதியை சேர்ந்த 36-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈரான் நாட்டின் அருகில் இருப்பதாக அவர்களது குடும்பத்தினர் இன்று என்னையும், மாவட்ட ஆட்சியர் அவர்களையும் சந்தித்து மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் பலர் அங்கு இருப்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிஸ் தீவில் சிக்கியுள்ளவர்களை சந்திக்க அயலக நலவாரியத்தினர் முயற்சி எடுத்துவருகின்றனர். மேலும், இராதாபுரம், திசையன்விளை வட்டாச்சியர்கள் மூலம் ஈரான் கடற்கரை பகுதிகளில் சிக்கி உள்ளவர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. 

முதல்வரின் தனிச்செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மூலம் ஆன்லைன் மூலம் ஈரானில் இருப்பவர்கள் குறித்த தகவலை பதிவு செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஈரான் பகுதியில் போர் நடக்கும் இடத்தில் உள்ளவர்கள் சொந்த ஊர் திரும்ப விரும்பினால் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவியும் செய்து தாயகம் அழைத்து வர தமிழ்நாடு முதலமைச்சர் தயாராக உள்ளார் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்கள். இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசு அயலக தமிழர் நல வாரிய உறுப்பினர் துபாய் மீரான் மற்றும் மீனவ பிரதிதிநிகள் உடன் இருந்தார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory