» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை, பணம் மோசடி : மேலும் ஒருவர் கைது!!
புதன் 19, நவம்பர் 2025 8:09:58 AM (IST)
கூடங்குளம் கட்டிட ஒப்பந்ததாரரிடம் உதவி கலெக்டராக நடித்து நகை-பணம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (30). கட்டிட ஒப்பந்ததாரரான இவரிடம், நக்கனேரியை சேர்ந்த சத்யாதேவி (34) என்பவர் தன்னை உதவிகலெக்டர் என்று கூறியதுடன் வடக்கன்குளத்தை சேர்ந்த சுரேஷ் (37) என்பவரை மண்டல அதிகாரியாகவும் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் அவர்கள் கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசு ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி உள்ளனர். தொடர்ந்து அவர்கள், தன்னிடம் 17 பவுன் நகை, ரூ.8½ லட்சம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறி பிரவீன் நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசனிடம் புகார் மனு அளித்தார்.
எஸ்பி உத்தரவுப்படி, மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி விஜயகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கடந்த அக்டோபர் மாதம் 18-ந்தேதி சத்யா தேவி மற்றும் 22-ந்தேதி செல்லத்துரை என்பவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சுரேஷை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று சுரேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோசடி சம்பவத்தின் போது பயன்படுத்திய ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்ஐஆர் பணிக்காக ஓடிபி வராது: வாக்காளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
புதன் 19, நவம்பர் 2025 8:15:43 AM (IST)

வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை : மர்மநபர்கள் கைவரிசை!!
புதன் 19, நவம்பர் 2025 8:12:19 AM (IST)

தென்காசி மாவட்டத்தில் கனமழை : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை
செவ்வாய் 18, நவம்பர் 2025 3:45:56 PM (IST)

வட்டாச்சியர் அலுவலகங்களில் எஸ்ஐஆர் உதவி மையங்கள் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 18, நவம்பர் 2025 11:17:25 AM (IST)

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.100 கோடியில் மேம்பாட்டு பணிகள் விரைவில் தொடக்கம்!
திங்கள் 17, நவம்பர் 2025 8:43:56 AM (IST)

நெல்லையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் ருசிகரம் : தந்தையும் மகனும் தேர்வெழுதினர்!!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:13:11 AM (IST)




