» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை : மர்மநபர்கள் கைவரிசை!!

புதன் 19, நவம்பர் 2025 8:12:19 AM (IST)

ராதாபுரம் அருகே வீடுபுகுந்து தம்பதியை மிரட்டி  4 பவுன் நகை-பணத்தை பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ராதாபுரம் அருகே பல்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சாமி (70). இவருடைய மனைவி சொர்ணம் (65). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். எனவே சாமி-சொர்ணம் தம்பதியர் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இதனை நோட்டமிட்ட மர்மநமபர்கள் நேற்று அதிகாலையில் சாமியின் வீட்டுக்குள் நைசாக புகுந்தனர்.

அங்கு வீட்டில் தூங்கி கொண்டிருந்த சாமி-சொர்ணம் தம்பதியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, சொர்ணம் அணிந்திருந்த 4 பவுன் நகைகளை பறித்தனர். மேலும் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் கொள்ளையடித்து தப்பி சென்றனர். கொள்ளையர்கள் சென்றதும் தம்பதியர் கூச்சலிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் இருளில் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory