» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
எஸ்ஐஆர் பணிக்காக ஓடிபி வராது: வாக்காளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
புதன் 19, நவம்பர் 2025 8:15:43 AM (IST)
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் செய்வதாக கூறி, செல்போன் எண் மூலம் ஓ.டி.பி. எண் கேட்டு மோசடியில் ஈடுபடுவதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு முன் அச்சிடப்பட்ட பட்டியலை வழங்கினார்கள். அந்த பட்டியலை பூர்த்தி செய்து வாங்கும் பணியும் இப்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பூர்த்தி செய்து வழங்கப்பட்ட பட்டியலில் அனைத்து வாக்காளர்களும் தங்களது செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளனர்.
அந்த செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. எனப்படும் கடவுச்சொல் அனுப்பி உள்ளதாகவும், அதை சொல்லுமாறு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டு மோசடி முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. அவ்வாறு யாரும் ஓ.டி.பி. எண் கேட்டால் வழங்க வேண்டாம், ஓ.டி.பி வழங்க மறுத்து விடுங்கள் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் ஆணையம் சார்பிலும் இதுபோன்று எந்தவித ஓ.டி.பி.யும் வாக்காளர் செல்போன் எண்ணுக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் குளித்த பெண் மூச்சுத்திணறி உயிரிழப்பு!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:45:00 AM (IST)

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது: போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
சனி 13, ஜூன் 2026 8:57:57 AM (IST)

நெல்லையில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:47:16 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 12, ஜூன் 2026 10:41:23 AM (IST)

லாரி ஓட்டுநர் தலை துண்டித்துக் படுகொலை : உறவினர்கள் போராட்டம்; போலீஸ் குவிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:19:43 AM (IST)

ஐந்தருவி, பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை: சிற்றருவி, புலியருவியில் உற்சாக குளியல்!
வியாழன் 11, ஜூன் 2026 11:21:31 AM (IST)


