» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
எஸ்ஐஆர் பணிக்காக ஓடிபி வராது: வாக்காளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
புதன் 19, நவம்பர் 2025 8:15:43 AM (IST)
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் செய்வதாக கூறி, செல்போன் எண் மூலம் ஓ.டி.பி. எண் கேட்டு மோசடியில் ஈடுபடுவதாக போலீசார் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு முன் அச்சிடப்பட்ட பட்டியலை வழங்கினார்கள். அந்த பட்டியலை பூர்த்தி செய்து வாங்கும் பணியும் இப்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பூர்த்தி செய்து வழங்கப்பட்ட பட்டியலில் அனைத்து வாக்காளர்களும் தங்களது செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளனர்.
அந்த செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. எனப்படும் கடவுச்சொல் அனுப்பி உள்ளதாகவும், அதை சொல்லுமாறு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டு மோசடி முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. அவ்வாறு யாரும் ஓ.டி.பி. எண் கேட்டால் வழங்க வேண்டாம், ஓ.டி.பி வழங்க மறுத்து விடுங்கள் என்று போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் ஆணையம் சார்பிலும் இதுபோன்று எந்தவித ஓ.டி.பி.யும் வாக்காளர் செல்போன் எண்ணுக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆந்திராவில் இருந்து கார், வேனில் கடத்தி வந்த ரூ.1¼ கோடி கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது!
திங்கள் 8, டிசம்பர் 2025 8:51:30 AM (IST)

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா எரிபொருள் விநியோகம்
சனி 6, டிசம்பர் 2025 10:26:05 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை : ஆன்லைன் விளையாட்டால் சோகம்!!
சனி 6, டிசம்பர் 2025 8:37:08 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:36:56 PM (IST)

நம்பியாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார் சபாநாயகர் அப்பாவு!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:17:31 PM (IST)


