» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட கப்பல் ஊழியருக்கு பீர் பாட்டிலால் தாக்குதல்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 7:57:10 AM (IST)
சாத்தான்குளம் அருகே மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட கப்பல் ஊழியர் பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திசையன்விளை பகுதியைச் சேர்ந்த ராமராஜன் (26) என்பவர், தனது நண்பரின் இருசக்கர வாகனம் பழுதானதால் அவருக்கு உதவ இடைச்சிவிளை தேரிவிளை பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது தேரிவிளையில் சாலையை மறைத்து ஜெயமுருகன், ராகுல், செல்வம் உள்ளிட்ட 5 பேர் மது அருந்திக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்களை வழிவிடுமாறு ராமராஜன் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அந்த கும்பல் பீர் பாட்டிலால் ராமராஜனை சரமாரியாகத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இதில் காயமடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தட்டார்மடம் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ளவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:18:01 PM (IST)

மகாசிவராத்திரி விழா: பஞ்சபூத திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 10:24:45 AM (IST)

கல்லிடைக்குறிச்சி அரபிக் கல்லூரி முதல்வருக்கு பாராட்டு விழா!
திங்கள் 9, பிப்ரவரி 2026 7:39:59 AM (IST)

வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது : நெல்லையில் பரபரப்பு
சனி 7, பிப்ரவரி 2026 5:40:09 PM (IST)

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்.17-ல் தாக்கல்: பேரவைத் தலைவர் அப்பாவு பேட்டி!
சனி 7, பிப்ரவரி 2026 4:03:18 PM (IST)

நெல்லையில் பொருநை புத்தகத் திருவிழா பிப்.10ஆம் தேதி தொடக்கம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
சனி 7, பிப்ரவரி 2026 12:27:12 PM (IST)


தமிழன்Feb 9, 2026 - 01:17:38 PM | Posted IP 162.1*****