» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு ரூ.2.98 லட்சம் மதிப்பில் நவீன வாசிப்புக் கருவிகள் - ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, ஜூன் 2026 4:05:43 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு ரூ.2.98 லட்சம் மதிப்பிலான அதிநவீன வாசிப்புக் கருவிகளை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆட்சியர் நேரில் பெற்றுக் கொண்டார். இன்றைய குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கைகளின் தன்மைக்கேற்ப மனுக்கள் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட்டன.
முக்கியக் கோரிக்கைகள் மற்றும் பொதுப் பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரடியாக அளிப்பதற்கான பிரத்யேக வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. கூட்டத்தில் பொதுமக்கள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களைச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்த மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் மோகன், அந்த மனுக்களை உடனடியாகப் பரிசீலனை செய்து, அதன் மீது உரிய நடவடிக்கைகளை மிக விரைந்து எடுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சிறப்புத் திட்டத்தின் கீழ், பார்வையற்ற 6 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களின் கல்விப் பயன்பாட்டிற்காகத் தலா ரூ.49,800/- மதிப்பிலான நவீன வாசிப்புக் கருவிகள் (Reading Devices) வழங்கப்பட்டன. மொத்தம் ரூ.2.98 லட்சம் மதிப்பிலான இந்த அதிநவீன வாசிப்புக் கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்ஆனந்த் மோகன் அவர்கள் மாணவ, மாணவியருக்கு நேரில் வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்வின் போது, திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் மு. துரை, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஜெயா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் வேலைவாய்ப்பு : கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் அறிவிப்பு
திங்கள் 15, ஜூன் 2026 5:43:43 PM (IST)

நெல்லையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பயிற்சி தொடக்கம்: சேகரிக்கப்படும் விபரங்கள்..!
திங்கள் 15, ஜூன் 2026 4:57:01 PM (IST)

குற்றாலம் மெயின் அருவியில் குளித்த பெண் மூச்சுத்திணறி உயிரிழப்பு!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:45:00 AM (IST)

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது: போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
சனி 13, ஜூன் 2026 8:57:57 AM (IST)

நெல்லையில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:47:16 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 12, ஜூன் 2026 10:41:23 AM (IST)


