» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தவெக ஆட்சியிலும் தொடர் கதையாகும் கனிம வளக் கடத்தல்? பொதுமக்கள் புகார்!

செவ்வாய் 16, ஜூன் 2026 12:20:20 PM (IST)

புளியரை சோதனைச் சாவடி வழியாக கேரளாவுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதாக புகார்கள் வலுத்துள்ளது. 

தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி வழியாக அண்டை மாநிலமான கேரளாவுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் ஜல்லி, கற்கள் மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவது தொடர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும், பொதுமக்களுக்குப் பாதிப்பும் ஏற்பட்டு வருகின்றன.

இதனை நிரந்தரமாகக் கட்டுப்படுத்த, கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படும் கனிம வளங்களுக்குப் 'பாஸ்' வழங்கும்போதே, ஒரு டன்னுக்கு 2,000 ரூபாய் வீதம் பசுமை வரி விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வந்தால், எல்லையைத் தாண்டிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை இயற்கையாகவே குறையும் என்று கருதப்படுகிறது. கனிமவளக் கடத்தலை முடக்கத் தமிழக அரசு இத்தகைய கடுமையான புதிய வரி விதிப்புத் திட்டத்தைப் பரிசீலித்துச் செயல்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory