» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தவெக ஆட்சியிலும் தொடர் கதையாகும் கனிம வளக் கடத்தல்? பொதுமக்கள் புகார்!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:20:20 PM (IST)
புளியரை சோதனைச் சாவடி வழியாக கேரளாவுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதாக புகார்கள் வலுத்துள்ளது.
தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடி வழியாக அண்டை மாநிலமான கேரளாவுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் ஜல்லி, கற்கள் மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவது தொடர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும், பொதுமக்களுக்குப் பாதிப்பும் ஏற்பட்டு வருகின்றன.
இதனை நிரந்தரமாகக் கட்டுப்படுத்த, கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படும் கனிம வளங்களுக்குப் 'பாஸ்' வழங்கும்போதே, ஒரு டன்னுக்கு 2,000 ரூபாய் வீதம் பசுமை வரி விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வந்தால், எல்லையைத் தாண்டிச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை இயற்கையாகவே குறையும் என்று கருதப்படுகிறது. கனிமவளக் கடத்தலை முடக்கத் தமிழக அரசு இத்தகைய கடுமையான புதிய வரி விதிப்புத் திட்டத்தைப் பரிசீலித்துச் செயல்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாபநாசம் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி!
செவ்வாய் 16, ஜூன் 2026 10:48:00 AM (IST)

பாளையங்கோட்டை மத்திய சிறையில் வேலைவாய்ப்பு : கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் அறிவிப்பு
திங்கள் 15, ஜூன் 2026 5:43:43 PM (IST)

நெல்லையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதற்கட்ட பயிற்சி தொடக்கம்: சேகரிக்கப்படும் விபரங்கள்..!
திங்கள் 15, ஜூன் 2026 4:57:01 PM (IST)

பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு ரூ.2.98 லட்சம் மதிப்பில் நவீன வாசிப்புக் கருவிகள் - ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 15, ஜூன் 2026 4:05:43 PM (IST)

குற்றாலம் மெயின் அருவியில் குளித்த பெண் மூச்சுத்திணறி உயிரிழப்பு!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:45:00 AM (IST)

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது: போலி அடையாள அட்டைகள் பறிமுதல்
சனி 13, ஜூன் 2026 8:57:57 AM (IST)


