» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திறந்தவெளியில் உள்ள மின் ஸ்விட்ச் பாக்ஸ்கள்: உடனடியாகச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
வியாழன் 30, ஜூலை 2026 5:46:09 PM (IST)

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி நகர் பகுதியில் திறந்த நிலையில் உள்ள மின் ஸ்விட்ச் பாக்ஸ்களை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு அன்னை வேளாங்கண்ணி நகர் குடியிருப்புப் பகுதியில், சாலையோரம் அமைந்துள்ள மின்கம்பத்தில் உள்ள ஸ்விட்ச் பாக்ஸ்கள் பாதுகாப்பற்ற முறையில் திறந்த நிலையில் ஆபத்தான முறையில் காணப்படுகின்றன. மின்கம்பத்தில் இரண்டு ஸ்விட்ச் பாக்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுமே கதவுகள் சேதமடைந்தோ அல்லது மூடப்படாமலோ திறந்த நிலையில் உள்ளன.
அதிகளவில் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் வாகனங்கள் கடந்து செல்லும் பகுதி என்பதால், எதிர்பாராத விதமாக அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். எனவே, ஏதேனும் பெரிய விபத்து அல்லது பாதிப்புகள் ஏற்படும் முன், திறந்த நிலையில் இருக்கும் இந்த மின் ஸ்விட்ச் பாக்ஸ்களை உடனடியாக ஆய்வு செய்து, பாதுகாப்பான முறையில் சீரமைத்துத் தருமாறு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் மின்சாரவாரிய அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)

பாஜக பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை: குடும்பத் தகராறில் விபரீதம்!
வெள்ளி 31, ஜூலை 2026 8:30:28 AM (IST)

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த தென்காசி தனியார் கல்லூரி தாளாளர் கைது!
வியாழன் 30, ஜூலை 2026 12:30:12 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழக நெல்லை மண்டலப் பொது மேலாளராக மோகன் குமார் பொறுப்பேற்பு!
வியாழன் 30, ஜூலை 2026 11:10:30 AM (IST)

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
வியாழன் 30, ஜூலை 2026 8:30:49 AM (IST)



அதுJul 30, 2026 - 06:28:15 PM | Posted IP 172.7*****