» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் கைதான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புழல் சிறையில் அடைப்பு

வியாழன் 16, ஜனவரி 2025 3:47:26 PM (IST)


ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் கைதான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே கடந்த மாதம் முகமது கவுஸ் என்பவரை கத்தி முனையில் கடத்தி ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங், வருமான வரித்துறை அதிகாரிகள் பிரபு, தாமோதரன், பிரதீப் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாசிங், வருமான வரித்துறை அதிகாரி தாமோதரன் ஆகிய இருவரையும் திருவல்லிக்கேணி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். 

அப்போது இவர்களுக்கு மூளையாக செயல்பட்டது சைதாப்பேட் டை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சன்னி லாய்டு என்பது தெரிய வந்தது. அவர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வழிப்பறி செய்த அதிர்ச்சி தகவலும் வெளியானது.சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சிங், சன்னி லாய்டு மற்றும் கைது செய்யப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஆகியோர் கூட்டு சேர்ந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்படும் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து அதை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக கூறி அவர்களே பங்கு போட்டுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து சன்னி லாய்டை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். கோர்ட்டு உத்தரவின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சன்னி லாய்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.இதையடுத்து போலீஸ் கமிஷனர் அருண், அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

சன்னி லாய்டு ஏற்கனவே சில வழக்குகளில் சிக்கி 3 முறை பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். கோடிக்கணக்கில் ஹவாலா பணத்தை வழிப்பறி செய்த சப்-இன்ஸ்பெக்டர் சன்னி லாய்டு அந்த பணத்தை கிழக்கு கடற்கரை சாலையில் ரிசார்ட் வாங்கி இருப்பதாகவும் ஜாம்பஜாரில் அதிநவீன உடற்பயிற்சி கூடம் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகின.

மேலும் அவர் எங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார், எத்தனை கோடி வழிப்பறி செய்துள்ளார் என்பது போன்ற விவரங்களை சேகரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதனால் அவரை ஒரு வாரம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். பொங்கல் விடுமுறை முடிந்ததும் அடுத்த வாரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து அவரை விசாரணைக்கு எடுத்து மேலும் பல தகவல்களை திரட்ட திட்டமிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory