» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றம் சாமானிய மக்களைப் பாதிக்கும் : விஜய் கண்டனம்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 12:49:28 PM (IST)
சாமானிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கும்போது, அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற அறிவிப்பைக் காற்றில் பறக்கவிட்ட மத்திய ஆட்சியாளர்கள், மக்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற நினைப்பில் உள்ளனர்.
தற்போது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில், மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள மத்திய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள்.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சரிந்திருக்கிறது. அதன் பயனை 'ஒருசிலர்' மட்டுமே அனுபவிக்க அனைத்துச் சலுகைகளையும் வழங்கி வரும் மத்திய அரசிற்கு, மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது வரும்? தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா?.
மத்திய அரசு இவ்வாறிருக்க, கடந்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, 'கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுப்போம்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசும், நான்கு ஆண்டுகளைக் கடந்தும் எதுவும் செய்யவில்லை. தேர்தல் வெற்றிக்காக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, பின்னர் மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் ஏமாற்றி வருகிறது. இந்தப் போக்கைத் திமுக அரசு எப்போது நிறுத்தும்? என்று மக்கள் கேட்கிறார்கள்.
பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றி, வாட்டி வதைப்பதில் மத்திய பாஜக அரசும், திமுக அரசும் இணைந்த கைகளாகவும், இரட்டைக் குழல் துப்பாக்கியாகவும் செயல்படுகின்றன. சாமானிய மக்களைப் பெரிதும் பாதிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு மீது பழிபோட்டுவிட்டுத் தப்பித்து விடலாம் என்ற நினைப்பில் இருக்கும் திமுக அரசு, இந்த நேரத்திலாவது மனசாட்சிப்படி, தேர்தல் அறிக்கையில் அறிவித்த சமையல் எரிவாயு சிலிண்டர் மானிய வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.
மீண்டும் மீண்டும் பொய் சொல்லி, ஏமாற்றும் வழக்கத்துடன் செயல்படும் மத்திய பாஜக அரசு மற்றும் திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, மக்கள் போராட்டத்தின் எதிர்வினை மிகத் தீவிரமாக இருக்கும். மக்களோடு தமிழக வெற்றிக் கழகம் களத்தில் நிற்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிட்கோ நிலத்தை அபகரித்ததாக வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 17, ஏப்ரல் 2025 11:43:56 AM (IST)

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் அழகுமீனா பங்கேற்பு
வியாழன் 17, ஏப்ரல் 2025 10:42:01 AM (IST)

குடும்பக்கட்டுப்பாடு செய்த பெண் கர்ப்பம்: ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 17, ஏப்ரல் 2025 8:48:08 AM (IST)

நாகர்கோவிலில் பொன்னப்ப நாடாருக்கு சிலை : முதல்வருக்கு விஜய் வசந்த் எம்.பி நன்றி
புதன் 16, ஏப்ரல் 2025 8:44:09 PM (IST)

மாநில சுயாட்சியை வலியுறுத்துவதில் முதல்வர் ஸ்டாலின் சாம்பியன் : கமல்ஹாசன் புகழாராம்
புதன் 16, ஏப்ரல் 2025 5:01:52 PM (IST)

தி.மு.க. ஆட்சியில் பள்ளிகள் கொலைவெறி கூடாரமாக மாறி நிற்கிறது: சீமான் குற்றச்சாட்டு!
புதன் 16, ஏப்ரல் 2025 4:17:23 PM (IST)

SOORIYANApr 8, 2025 - 03:39:46 PM | Posted IP 162.1*****